ரம்ஜான் பண்டிகை- கோவையில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஒரே இடத்தில் தொழுகை…

கோவை: கோவையில் இன்று ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 10,000க்கும் மேற்பட்டோர் சிறப்பு தொழுகை மேற்கொண்டனர்.

ரம்ஜானை முன்னிட்டு நடைபெற்ற தொழுகையில் உலக நாடுகள் போர் பதற்றம் நீங்கி அமைதி பெற வேண்டி சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டனர்.

கோவையில் ரம்ஜானை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு தொழுகையில் இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் கட்டி தழுவி ரம்ஜான் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டாடினர்.

இஸ்லாமியர்களின் புனித மாதமான ரம்ஜான் மாதத்தில் 30 நாட்கள் இஸ்லாமிய மக்கள் நோன்பு இருந்து பிறகு ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.ரம்ஜான் பெருநாள் வரும் மாதமே இஸ்லாத்தில் சிறந்த மாதமாக இன்று வரை கருதப்படுகிறது. இந்த மாதம் இறைவனை நெருங்கும் மாதமாகவும், சொர்க்க வாசல்கள் அனைத்தும் திறக்கப்பட்டு, நரக வாசல்கள் மூடப்படும் மாதமாகவும், நன்மைகள் அதிகம் கிடைக்கும் மாதமாகவும் இஸ்லாமியர்கள் கருதுகின்றனர்.ஆகவே இந்த மாதம் முழுவதும் நோன்பு இருந்து ரம்ஜான் பண்டிகையினை இஸ்லாமியர்கள் இன்று கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் இந்த ஆண்டு ஈகைத் திருநாள் எனப்படும் ரமலான் பண்டிகையினை முன்னிட்டு கோவை உக்கடம் கோட்டைபுதூர் பகுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் ரமலான் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது.இந்த தொழுகையில்,உலகின் பல பகுதிகளில் நடைபெற்று வரும் போர்கள் நிறுத்தப்பட்டு அமைதி நிலவ வேண்டும் என பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

இந்த சிறப்பு தொழுகையில் புத்தாடைகள் அணிந்து சிறப்பு தொழுகையில் பங்கேற்ற இஸ்லாமியர்கள் ஒருவருக்கு ஒருவர் கட்டித் தழுவி ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். ஒரே இடத்தில் 10,000க்கும் மேற்பட்டோர் தொடர்ச்சியாக வருகை புரிந்து தொழுகை மேற்கொண்டனர்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

1 COMMENT

  1. ஈரான் பாயிக்கு கதார், சவூதி, க்வெய்த், துபாய், ஓமன், பாஹ்ரைன் பாய்ங்களக் கண்டா பிடிக்காது. என்னவோப்பா, அண்ணனை முடிஞ்சா சரி!! உலக நாட்டாமைக்கு(??) இது புரியலையே!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

Video

கோவையில் கார் தீ பிடிப்பு- சாமர்த்தியமாக செயல்பட்ட ஓட்டுநர்…

கோவை சின்னியம்பாளையம் அருகே அவினாசி சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்த நிலையில், ஓட்டுநர் சாமர்த்தியமாக இறங்கியதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.