திமுக ஒன்றும் பாஜக அல்ல, நாங்கள் அதிமுகவும் அல்ல – கோவையில் முத்தரசன் பேட்டி…

கோவை: எங்களை நிர்பந்திப்பதற்கு திமுக பாஜவுமல்ல அடிபணிவதற்கு நாங்கள் அதிமுகவைப் போல் அடிமையுமில்லை என முத்தரசன் தெரிவித்துள்ளார்.

தேர்தலில் இவ்வளவு இடங்களில் தான் கொடுப்போம் என நிர்பந்திப்பதற்கு திமுக பாஜக அல்ல என்றும் ஏற்றுக்கொண்டு அடிபணிவதற்கு நாங்கள் அதிமுக போல் அடியுமையுமில்லை என சிபிஐ கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் கூறினார்.

தேர்தல் சுற்றுப்பயணமாக திமுக கூட்டணியின் முக்கிய பிரமுகர்களை சந்திக்க பெரியநாயக்கன்பாளையத்திற்கு வருகை தந்த அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்த தேர்தலில் எங்கள் கட்சிக்கு ஒரு இடம் குறைத்து பெறப்பட்டுள்ளது. திமுக நிர்பந்தித்ததா? இல்லை சமரசம் செய்து கொண்டீர்களா? என பல்வேறு செய்தியாளர்கள் கேட்கின்றனர்.

திமுக தலைமையில் அமைந்துள்ள மதச்சார்பற்ற கூட்டணி என்பது கொள்கைக் கூட்டணி. இக்கூட்டணியைபோல் வேறு எந்த கூட்டணியும் 10 ஆண்டுகளாக நிலைத்து நின்றதில்லை. கடந்த 1952 ஆண்டு முதல் தமிழக தேர்தல் வரலாற்றில் கூட்டணி அமைத்தே போட்டிகள் நடைபெற்றுள்ளன.

Click here to read news சூர்யாவிடம் வம்பிழுத்த விஜய் ரசிகர்கள்… ஜோதிகா கொடுத்த பதிலடி!

நான் அறிந்த வரையில் திமுக கூட்டணியானாலும், அதிமுக கூட்டணியானாலும் ஓராண்டுக்கு மேல் நீடித்ததாக வரலாறு இல்லை. ஆனால் தற்போதைய எங்கள் திமுக கூட்டணி 10 ஆண்டுகளாக நீடிப்பதற்கு காரணம் கொள்கைக்கூட்டணி. கொள்கைப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம்.

அதனால் சீட்டு என்பது பிரச்னையில்லை. இது நமக்கு எது அபாயம் என்றே பார்க்கவேண்டும். எது தீங்கானது? ஆர்.எஸ்.எஸ்.தான் தீங்கானது. இந்த தீங்கிற்கு தமிழகத்தில் சிலர் துணைபோய்விட்டனர். இவர்களை அனுமதிப்பது தமிழகத்திற்கு மட்டுமல்ல. ஒட்டுமொத்த தேசத்திற்கே ஆபத்து.

Read Also: Coimbatore Crime News: மக்களே உஷார்… 77 நாட்களில் ரூ.15 கோடி மோசடி!

அந்த அக்கறையும், பொறுப்பும் எங்களுக்கு இருக்கின்ற காரணத்தினால் நாங்கள் இந்த கூட்டணியை ஏற்றுக் கொண்டுள்ளோம். அதனால் சீட்டு குறைவதைப் பற்றியே கூடுவதைப் பற்றியோ எங்களுக்கு கவலை இல்லை. என்றார்.

செய்தியாளர் சந்திப்பின்போது, வால்பாறைத் தொகுதியின் முன்னாள் எம்,எல்.ஏ. ஆறுமுகம், பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சிமன்றத் தலைவர் வெ.விஷ்வபிரகாஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

Video

கோவையில் கார் தீ பிடிப்பு- சாமர்த்தியமாக செயல்பட்ட ஓட்டுநர்…

கோவை சின்னியம்பாளையம் அருகே அவினாசி சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்த நிலையில், ஓட்டுநர் சாமர்த்தியமாக இறங்கியதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.