ஸ்டாலின் தொடரட்டும்- பாதாகைகளுடன் கோவையில் அணிவகுத்த SDPI கட்சியினர்….

கோவை: ஸ்டாலின் தொடரட்டும் என பதாகைகளுடன் SDPI கட்சியினர் அணிவகுத்தனர்.

Advertisement

கோவை கொடிசியா மைதானத்தில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி பொதுக்கூட்டம் நடைபெறுகிறது ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் என்ற கருப்பொருளைக் கொண்டு நடத்தப்படும் இந்த பொதுக்கூட்டத்தில் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பரப்புரை செய்கிறார்.

குறிப்பாக இந்த பரப்புரையில் கோவையை சேர்ந்த ஆறு சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர்களை ( கோவை தெற்கு செந்தில் பாலாஜி, கோவை வடக்கு துரை செந்தமிழ் செல்வன், கிணத்துக்கடவு சபரி கார்த்திகேயன், பொள்ளாச்சி நித்தியானந்தன், வால்பாறை சுதாகர், சூலூர் தளபதி முருகேசன்) அறிமுகம் செய்து ஆதரவு திரட்டுகிறார்.

சுமார் 2000க்கும் மேற்பட்டோர் அமரும் வகையில் இருக்கை வசதிகள் செய்யப்பட்டுள்ளது இதில் திமுக உட்பட கூட்டணி கட்சியினர்களும் பங்கேற்கின்றனர். சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவித்த பிறகு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று கோவை வந்து தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார்.

Advertisement

இந்நிலையில் இந்த கூட்டத்திற்கு வருகை புரிந்து இருந்த எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்தவர்கள் “ஸ்டாலின் தொடரட்டும்” என்ற தனித்தனி எழுத்துக்கள் கொண்ட பதாகையை ஏந்தி திமுகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Advertisement

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Latest News Coimbatore | கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை மாவட்டத்தின் முக்கிய அரசியல், குற்றம், வானிலை, போக்குவரத்து மற்றும் உள்ளூர் நிகழ்வுகளின் உடனடி செய்திகளை அறிந்து கொள்ளுங்கள்.

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...