ஓடாத படத்திற்கு ப்ரமோஷன்… கோவையில் சிரிப்பு காட்டிய கூல் சுரேஷ்…!

கோவை: லெஜெண்ட் சரவணன் நடிப்பில் வெளியாகியுள்ள லீடர் படம் வெற்றி பெற்றுவிட்டதாகக் கூறி கோவையில் தம்பட்டம் அடித்துள்ளார் நடிகர் கூல் சுரேஷ். இதனைப் பார்த்த் அவ்வழியாகச் சென்ற பொதுமக்கள் சிரித்தபடி சென்றனர்.

Advertisement

தொழிலதிபர் சரவணன் நடித்த லீடர் படம் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வெளியானது. படம் 10 பைசாவுக்கு பிரியோஜனம் இல்லை என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில், படம் ஆஹோ ஓஹோ வெற்றி பெற்றுவிட்டதாக கோவையில் கூல் சுரேஷ் தம்பட்டம் அடித்து சிரிப்பு காட்டியுள்ளார்.

கோவை நூறடி சாலையில் உள்ள கற்பகம் சினி காம்ப்ளக்ஸ் வளாகத்தில் லீடர் படத்தின் வெற்றி விழாக் கொண்டாட்டம் என்று கூறிக்கொண்டு ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு வந்த நடிகர் கூல் சுரேஷ், ஒரு மாட்டுவண்டியை தானே இழுத்து வருவது போன்று பாவல காட்டியபடி வந்தார். .

Advertisement

நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வந்த அவர், ரசிகர்கள் மத்தியில் பெரும் சிரிப்பை ஏற்படுத்தினார்.

இதன்பின்னர் பேசிய கூல் சுரேஷ்,

Advertisement

“நல்ல படங்களுக்கு ரசிகர்கள் எப்போதும் ஆதரவு தருவார்கள். லீடர் படம் அதற்கு ஒரு உதாரணம். இப்படம் மேலும் பெரிய வெற்றி பெற வேண்டும்” என்றார்.

“10 பைசாவுக்கு பிரியோஜனம் இல்லாத படத்திற்கே இந்த அலப்பறையா” என்ற அங்கிருந்த பொதுமக்கள் அவரை திட்டியபடி சென்றனர்.

Amazon Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

ஆடிப்பெருக்கு- பேரூர் படித்துறையை சுத்தம் செய்ய களம் இறங்கிய மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள்…

கோவை: ஆடிப்பெருக்கு தினத்தை முன்னிட்டு பேரூர் படித்துறையை சுத்தம் செய்வதற்கு கல்லூரி மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் களமிறங்கினர். ஆடிப்பெருக்கு நன்னாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் நீர் நிலைகளில் பொதுமக்கள் திரண்டு கனிகள் பலகாரங்கள் உணவுகள்...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...