கோவை: 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என தமிழக வெற்றிக் கழகம் நிர்வாகி செங்கோட்டையன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தமிழக அரசியலில் தமிழக வெற்றிக் கழகத்தின் வருகை ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என அக்கட்சியின் முக்கிய நிர்வாகி செங்கோட்டையன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழக வரலாற்றிலேயே இதுவரை எந்த ஒரு அரசியல் தலைவருக்கும் கிடைக்காத மிகப்பெரிய வரவேற்பு நமது தலைவருக்குக் கிடைத்துள்ளது. இதனால் பிற அரசியல் கட்சிகள் அச்சத்தில் உள்ளன” என்று கூறினார்.
மேலும், வரவிருக்கும் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் அமோக வெற்றி பெறும் என்பது உறுதி என்றும், இது தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.
தலைவர் ஏன் செய்தியாளர்களைச் சந்திக்கவில்லை என்ற கேள்விக்கு, “சரியான நேரத்தில் மக்களுக்கு பதில் சொல்ல அவர் நிச்சயமாகச் செய்தியாளர்களைச் சந்திப்பார். மக்களை நேசிப்பவர்களுக்கே அவர் முக்கியத்துவம் அளிக்கிறார்” என பதிலளித்தார்.
இந்த கருத்துகள் தமிழக அரசியல் வட்டாரத்தில் கவனம் ஈர்த்து வருகின்றன.



First poketha sir…jeikirara papoom