கோவை: கோவையில் கர்நாடகாவில் இருந்து உரங்களைக் கொண்டு வந்து தமிழகத்தில் பதுக்கி வைத்து கேரளாவுக்கு கடத்த முயன்ற உரங்களை ஊர் பொதுமக்கள் பறிமுதல் செய்தனர்.
கோவை மாவட்டம் திருமலையாம்பாளையம் பகுதியில் Terra Polymers என்ற நிறுவனம் கர்நாடகாவில் இருந்து உரங்களைக் கொண்டு வந்து தமிழகம்-கேரளா பகுதியான திருமலையாம்பாளையத்தில் பதுக்கி வைத்திருப்பதாகவும் அதனை கேரளா மாநிலம் திருச்சூர் மாவட்டம் உரிமையாளர் ஆசிப் என்பவருக்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயி மாதேஸ்வரன்-க்கு தகவல் கிடைத்துள்ளது.
அதன் அடிப்படையில் அப்பகுதி பொதுமக்கள் விவசாயிகள் சென்று உரங்களை பறிமுதல் செய்தனர். இது குறித்து ஊராட்சி செயலாளர் கேட்ட போது இது சம்பந்தமாக தெரியவில்லை என்று அலட்சியமாக பதில் அளிப்பதாகவும் ஒரு விவசாயிக்கு ஒரு மூட்டை உரம் கிடைப்பதற்கு கடும் தட்டுபாடு விதிக்கப்பட்டு வரும் நிலையில் இங்கு 10,000-க்கும் மேற்பட்ட உரம் மூட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர்.


