கோவையில் புதிய UIDAI ஆதார் சேவை மையம் தொடக்கம்…

கோவை: கோவையில் புதிய UIDAI ஆதார் சேவை மையம் தொடங்கப்பட்டது.

Advertisement

மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் UIDAI (Unique Identification Authority of India) சார்பில், நாடு முழுவதும் ஆதார் சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஆதார் தொடர்பான பல்வேறு சேவைகளை மேம்படுத்திடவும், பொதுமக்களுக்கு ஆதார் சேவைகளை எளிதாக வழங்கிடவும் கோவை காந்திபுரம் பகுதியில் புதிய ஆதார் சேவை மையம் இன்று திறக்கப்பட்டுள்ளது.

துவக்க நிகழ்வில், UIDAI பெங்களூர் அலுவலகத்தின் இயக்குனர் பவன்குமார் மற்றும் அதிகாரிகள் முன்னிலை வகித்தனர். ஆதார் சேவை பெற வந்த முதியவர், ரிப்பன் வெட்டியும் விளக்கேற்றையும் இம்மையத்தை துவக்கி வைத்தார்.

Advertisement

இம்மையத்தில், ஆதார் தொடர்பான அனைத்து சேவைகளையும் பொதுமக்கள் பெரும் வகையில் மேம்படுத்தப்பட்ட வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்த மையம் வாரத்தில் அனைத்து நாட்களும் இயங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த ஆதார் சேவை மையத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்களுக்கு ஏற்ற வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்த மையத்தில் ஆதார் புதுப்பிப்பு, ஆதார் பதிவிறக்கம், ஆதார் பிவிசி ஆர்டர் செய்தல், ஆவண புதுப்பிப்பு மற்றும் ஆதார் தொடர்பான தகவல்களை சரி பார்க்கும் சேவைகள் வழங்கப்படுகிறது.

Flipkart Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

மலைவாழ் மக்களின் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பு! கோவையில் சிறப்பு கண்காட்சி!

கோவை அவினாசி சாலையில் உள்ள சுகுணா திருமண மண்டபத்தில் செப்டம்பர் 12 மற்றும் 13 தேதிகளில் 162 ஸ்டால்களுடன் சிறப்பு கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் மலைவாழ் மக்கள் மற்றும் பெண்கள் தயாரிக்கும் இயற்கைப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் உள்ளிட்டவை இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளன.

Video

தொழிலாளர்கள் கொட்டகையை சேதப்படுத்திய காட்டுயானை- கோவை அருகே பரபரப்பு…

கோவை: கட்டிட தொழிலாளர்கள் தங்கியிருந்த தகர கொட்டகையை சேதப்படுத்திய ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை துடியலூர் அடுத்துள்ள கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் நேற்று நள்ளிரவில் குடியிருப்புக்குள் புகுந்து வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த...