கோவை: கோவை திருச்சி சாலை மேம்பாலத்தில் திருமணம் முடிந்த பிறகு, காரில் பேரணி சென்ற இளைஞர்கள், காரில் ஆபத்தான முறையில் நின்றபடி போட்டோ சூட் எடுத்து சக வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது
கோவை இராமநாதபுரம் மேம்பாலத்தில் திருமணம் முடிந்த பிறகு காரில் நின்றபடி போட்டோ சூட் எடுத்து இதர வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தி உள்ளனர்.
கோவை மாநகர் ராமநாதபுரத்தில் உள்ள மேம்பாலத்தில் காரில் கதவில் தொங்கியபடி திருமணத்திற்கான போட்டோ சூட் நடத்தப்பட்டுள்ளது.
காலில் ஜன்னல் வழியாக உடலை வெளியே நீட்டி மணமகனுக்கு போட்டோ சூட் நடத்தி உள்ளனர் சில இளைஞர்கள்.
திருமணம் முடிந்த கையோடு 10க்கும் மேற்பட்ட கார்களில் பேரணியாக சென்ற இளைஞர்கள் திருச்சி சாலை மேம்பாலத்தில் கார்களீல் வெளியே தொங்கிய படி சென்றுள்ளனர்.
மேலும், கார்கள் ஊர்வலமாகச் சென்றுள்ளன. இதனால் மேம்பாலத்தில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இது போன்று போக்குவரத்திற்கான பாலத்தை போட்டோ சூட்டிற்காக பயன்படுத்துபவர்கள் மீது போக்குவரத்து காவல் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.





