கோவை: கோவையில் கஞ்சா வியாபாரிகளுக்கு கஞ்சா சப்ளை செய்த நபர் பிடிபட்டார்.
கோவை மாநகரில் கஞ்சா வியாபாரிகளுக்கு கஞ்சா சப்ளை செய்து வந்த நபரை போலிசார் கைது செய்துள்ளனர்.
கோவை தொண்டாமுத்தூர் தேவராயம்புபுரம் பகுதியைச் சேர்ந்த ஷெல்டன் என்பவர் கஞ்சா வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாக மதுவிலக்கு தடுப்பு பிரிவு போலீசருக்கு தகவல் கிடைத்துள்ளது.
அதனைத் தொடர்ந்து வடவள்ளி அருகே உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பின் அருகில் அவர் நின்று கொண்டிருந்த போது போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அவரது காரை போலீசார் சோதனையிட்ட பொழுது காரில் 22 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது.
தொடர் விசாரணையில் அவர் கஞ்சா விற்பனை செய்யும் நபர்களுக்கு கஞ்சாவை சப்ளை செய்து வந்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.




