கோவை: போதையில்லா தமிழகம் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அண்ணாமலை கோவைக்கு வருகை புரிந்தார்.
போதையில்லா தமிழகம் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அண்ணாமலை சென்னையிலிருந்து கோவைக்கு வருகை புரிந்தார்.
கோவை பொள்ளாச்சி அருகே உள்ள ஆட்சிபட்டியில் We The Leaders அமைப்பின் சார்பில் போதையில்லா தமிழகம் என்ற மாநாடு இன்று நடைபெறுகிறது. We the Leaders அமைப்பின் தலைவர் அண்ணாமலை பொறுப்பேற்ற பிறகு முதல் முறை தமிழகத்தில் நடைபெறும் நிகழ்ச்சி இதுவாகும்.
ஆயிரக்கணக்கானோர் இதில் பங்கேற்க உள்ளனர். இந்த நிகழ்வில் போதை பொருள் ஒழிப்பு குறித்தான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அது குறித்தான சிறப்புரை ஆகியவை இதில் இடம்பெற உள்ளன. இந்த அமைப்பின் முதல் நிகழ்ச்சி இது என்பதால் பலரது மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்புகள் உள்ளது.
இந்நிலையில் இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் அண்ணாமலை கோவைக்கு வருகை புரிந்தார். அவரிடம் இந்த நிகழ்வு குறித்து பல்வேறு கேள்விகள் செய்தியாளர்கள் எழுப்பிய நிலையில் எதற்கும் பதிலளிக்காமல் மாலை பொள்ளாச்சியில் பேசுகிறேன் என்று கூறி சென்றார்.
அண்ணாமலை வந்த அதே விமானத்தில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசனும் வருகை புரிந்த நிலையில்அவரிடமும் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை முன் வைத்தனர் அதற்கு வானதி சீனிவாசன் பதில் அளிக்கவில்லை.





