பழைய இரும்பு கடையில் 60 கிலோ செம்பு கம்பி திருட்டு: 3 பேர் கைது

கோவை : கோவை குனியமுத்தூரில் பழைய இரும்பு கடையில் பூட்டை உடைத்து 60 கிலோ செம்பு கம்பிகளை திருடிய வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மேலும் ஒருவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Advertisement

கோவை குனியமுத்தூர் அரசு குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த அரவிந்த் (27) என்பவர், குனியமுத்தூர் கே.ஜி.கே. சாலையில் பழைய இரும்பு வியாபாரம் செய்து வருகிறார். கடந்த ஜூன் 29-ஆம் தேதி இரவு, அவரது கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், அங்கிருந்த சுமார் 60 கிலோ எடையுள்ள செம்பு கம்பிகளை திருடிச் சென்றனர். திருடப்பட்ட பொருட்களின் மதிப்பு சுமார் ரூ.30 ஆயிரம் என கூறப்படுகிறது.

இதுகுறித்து அரவிந்த் அளித்த புகாரின் பேரில், குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், கரும்புக்கடை பகுதியைச் சேர்ந்த ஆசிப் (25), உக்கடம் புல்லுகாடு பகுதியைச் சேர்ந்த முகமது யாசர் என்ற அப்பு (24), கரும்புக்கடை ஆசாத் நகரைச் சேர்ந்த ஜாபர் அலி (31) ஆகியோர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

Advertisement

இதையடுத்து, 3 பேரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து சுமார் 14.750 கிலோ செம்பு கம்பி மற்றும் ரூ.5 ஆயிரம் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும், இந்த வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்படும் பர்னபாஸ் என்ற நான்காவது நபர் தலைமறைவாக உள்ள நிலையில், அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Advertisement

Flipkart Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று கோவை வருகை: பலத்த போலீஸ் பாதுகாப்பு

துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று கோவை வருவதையொட்டி முக்கிய பகுதிகளில் 48 மணி நேர டிரோன் தடை அமல்படுத்தப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...