பக்தி வெள்ளத்தில் திளைத்த ஏழூர் பிரிவு; ஸ்ரீ ஆண்டாள் அம்மன் ஆடி கழிவு திருவிழா கோலாகலம்

கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவை அடுத்த ஏழூர் பிரிவில் அமைந்துள்ள ஸ்ரீ ஆண்டாள் அம்மன் – ஸ்ரீ ரங்க மன்னார் கருடாழ்வார் சன்னதி, சுற்றுவட்டார பகுதி மக்களின் ஆழ்ந்த பக்தி நம்பிக்கைக்கு உரிய பிரசித்தி பெற்ற திருத்தலமாக விளங்கி வருகிறது.

Advertisement

இச்சன்னதியில் ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கை முன்னிட்டு நடைபெறும் ஆடி கழிவு திருவிழா, முன்னோர்களை நினைவுகூரும் புனித நிகழ்வாகவும், குலதெய்வ வழிபாட்டின் மகத்துவத்தை எடுத்துரைக்கும் ஆன்மிக திருவிழாவாகவும் பக்தர்களால் மிகுந்த பக்தி பரவசத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஸ்ரீ ஆண்டாள் அம்மன் – ஸ்ரீ ரங்க மன்னார் கருடாழ்வார் சன்னதி

இந்த ஆண்டுக்கான ஆடி கழிவு திருவிழா இன்று கோலாகலமாக தொடங்கியது. அதிகாலை முதலே பக்தர்கள் திரளாகக் கூடிய நிலையில், தன்னாசி கோயிலில் இருந்து சக்தி கரகம் பக்தி முழக்கங்களுடனும், மேளதாள இசை முழக்கங்களுடனும் அழைத்து வரப்பட்டது.

பின்னர் அந்த சக்தி கரகம் ஸ்ரீ ஆண்டாள் அம்மன் சன்னதிக்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஸ்ரீ ஆண்டாள் அம்மனுக்கு பால் அபிஷேகம், நெய் அபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் பக்தி முறைப்படி நடைபெற்றன.

Advertisement
மலர் அலங்காரத்தில் ஸ்ரீ ஆண்டாள்
மலர் அலங்காரத்தில் ஸ்ரீ ஆண்டாள்

மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய ஆண்டாள் அம்மனை தரிசிக்க ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனர். அம்மனின் அருளைப் பெறும் நோக்கில் குடும்பம் குடும்பமாக பக்தர்கள் நேர்த்திக்கடன்களை செலுத்தி, வளமான வாழ்க்கை, குடும்ப நலன் மற்றும் முன்னோர் ஆசீர்வாதம் வேண்டி பிரார்த்தனை செய்தனர்.

அதனைத் தொடர்ந்து அருகில் உள்ள கருப்பராயன் கோவிலில் பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பின்னர் கிடாவெட்டு நிகழ்ச்சியும் பக்தி மரபுகளின்படி நடைபெற்றது. தொடர்ந்து திரளாகக் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு, அனைவரும் பக்தி உணர்வுடன் அதில் பங்கேற்றனர்.

Advertisement

இந்த ஆன்மிக திருவிழாவில் ஆரநாட்டு உறவினர்கள், கிணத்துக்கடவு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து அருளாசி பெற்றனர்.

ஸ்ரீ ஆண்டாள் அம்மன் – ஸ்ரீ ரங்க மன்னார் கருடாழ்வார் சன்னதி

பக்தி, பாரம்பரியம் மற்றும் முன்னோர் வழிபாட்டு மரபை ஒருங்கிணைக்கும் இத்திருவிழா, ஆண்டுதோறும் மக்கள் மனங்களில் தனித்துவமான இடத்தைப் பெற்று வருகிறது.

திருவிழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோயில் தலைவர் வெள்ளியங்கிரி, துணைத்தலைவர் மகாலிங்கம், செயலாளர் ரவி, பொருளாளர் பன்னீர், கௌரவ தலைவர் நஞ்சப்பன் மற்றும் பூசாரி முருகன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

Amazon Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

முதல்வர் விஜய் அரசின் முதல் பட்ஜெட் திருப்தியளித்ததா? கோவை தொழில்துறையினர் சொல்வது இதுதான்!

கோவை: தமிழக சட்டசபையில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசு முதல்முறையாக பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்துள்ளது. இதில், தொழில்துறையினருக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது, தொழில்துறையினரை திருப்தியடையச் செய்ததா? என்பதை இந்தத்...

Video

துடியலூர் மக்கள் கவனத்திற்கு- சிசிடிவி காட்சிகள்…

கோவை: துடியலூர் அருகே ஊருக்குள் காட்டு யானை நடமாடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை துடியலூர் அடுத்த கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் ஒற்றை காட்டி யானை இரவு நேரத்தில் ஊருக்குள் நடமாடும் சிசிடிவி...