கோவையில் தெரு நாய்கள் கருத்தடை சிகிச்சை தீவிரம்…

கோவை: கோவை மாநகராட்சியில் தெருநாய்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சை திட்டம் தீவிரமாகவும் தொடர் நடவடிக்கையாகவும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

Advertisement

கோயம்புத்தூர் மாநகராட்சியில் தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும் அவற்றின் நலனை உறுதி செய்யவும் விலங்கு பிறப்புக் கட்டுப்பாடு (ANIMAL BIRTH CONTROL – ABC) திட்டம் தீவிரமாகவும்தொடர் நடவடிக்கையாகவும் செயல்படுத்தப்பட்டு வருவதாக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர் மாநகராட்சிப் பகுதியில் மதிப்பிடப்பட்டுள்ள மொத்தம் 1,11,074 நாய்களில், இதுவரை சுமார் 42,300 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மீதமுள்ள 68,774 நாய்களுக்கும் கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ள மாநகராட்சி திட்டமிட்டு, முழுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

தற்போது மாநகராட்சியுடன் இணைந்து 4 தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் முழுநேரமாக செயல்பட்டு, தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சைகளை மேற்கொண்டு வருகின்றன.

Advertisement

மேலும், தற்போதைய நிலையில் மாதத்திற்கு சுமார் 1400 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரித்துஇந்த மாதத்திலேயே மாதத்திற்கு 2000 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் இலக்கை அடைய மாநகராட்சி தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது.

மேலும், தெருநாய்களின் எண்ணிக்கையை அறிவியல் பூர்வமாகவும், மனிதாபிமான முறையிலும் கட்டுப்படுத்துவதுடன், பொதுமக்கள் மற்றும் சமூக நாய்களின் நலனை உறுதி செய்வதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Amazon Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

வால்பாறையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து…

கோவை: வால்பாறையில் சுற்றுலா வேன் கவிழ்ந்த விபத்தில் 12 பேர் காயமடைந்தனர். கோவை மாவட்டம் வால்பாறைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். வால்பாறை மிகவும் குறுகிய வளைவுகள் கொண்ட சாலைகளாக இருப்பதால்...

Video

பொள்ளாச்சியில் ஹெல்மெட்டை திருடிய ஜோடி- சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் இருந்து ஹெல்மட்டை நூதனமாக திருடி செல்லும் இளம் பெண்ணின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம் பொள்ளாச்சி உடுமலைப்பேட்டை சாலையில் இருசக்கர வாகனத்தில் ஒரு இளைஞரும்...