கோவையில் அரிய பாம்பு மீட்பு! வன உயிரின ஆர்வலர்கள் துணிகரம்

கோவை : கோவை நஞ்சுண்டாபுரம் சாலையில் நீண்ட நாட்களாக பூட்டப்பட்டிருந்த உணவகத்தை மீண்டும் திறக்கும்போது, சமையலறைக்குள் மறைந்திருந்த அரிய வகை பாம்பை வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை (WNCT) மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டு வனப்பகுதியில் விடுவித்தனர்.

Advertisement

கோவை மாவட்டம் நஞ்சுண்டாபுரம் சாலை – நேதாஜி நகர் பகுதியில் உள்ள உணவகம் ஒன்று நீண்ட நாட்களாக பூட்டப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி உணவகத்தை மீண்டும் திறப்பதற்காக அதன் உரிமையாளர்கள் சுத்தம் செய்து தயார்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, போதிய வெளிச்சம் இல்லாத சமையலறைக்குள் பாம்பு ஒன்று மறைந்திருப்பதை ஊழியர்கள் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து உடனடியாக வனவிலங்கு மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளைக்கு (Wildlife & Nature Conservation Trust – WNCT) தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலறிந்த WNCT மீட்புக் குழுவினர் மோகன் மற்றும் மோனா ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர், சமையலறைக்குள் மறைந்திருந்த பாம்பை ஊழியர்களுக்கு எந்தவித அச்சுறுத்தலும் ஏற்படாத வகையில் சாதுரியமாக பிடித்து பத்திரமாக மீட்டனர்.

Advertisement

மீட்கப்பட்ட பாம்பு ‘வெள்ளிக்கோள்வரையன்’ (Common Wolf Snake) வகையைச் சேர்ந்தது என வனவிலங்கு ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், இந்த வகை பாம்புகள் உடலமைப்பில் ஆபத்தான கட்டுவிரியன் பாம்புகளைப் போன்று வெள்ளை நிறக் கோடுகளுடன் காணப்பட்டாலும், இவை முற்றிலும் நஞ்சற்றவை. மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தாத சாதுவான பாம்புகளாகும். வீடுகளில் காணப்படும் பூச்சிகள் மற்றும் பல்லிகளை உணவாக உட்கொள்ளும் இயல்புடையவை என தெரிவித்தனர்.

Advertisement

மேலும், நீண்ட நாட்களாக பூட்டப்பட்டிருந்த வீடுகள், கடைகள் மற்றும் உணவகங்களை மீண்டும் திறக்கும்போது போதிய வெளிச்சத்துடன் மிகுந்த கவனத்துடன் சென்று சுத்தம் செய்ய வேண்டும் என WNCT அமைப்பினர் அறிவுறுத்தினர்.

பாம்புகள் தென்பட்டால் அவற்றை அடித்துக் கொல்லாமல், உரிய வன உயிரின மீட்புக் குழுவினருக்கு தகவல் தெரிவித்து பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

Flipkart Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

மலைவாழ் மக்களின் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பு! கோவையில் சிறப்பு கண்காட்சி!

கோவை அவினாசி சாலையில் உள்ள சுகுணா திருமண மண்டபத்தில் செப்டம்பர் 12 மற்றும் 13 தேதிகளில் 162 ஸ்டால்களுடன் சிறப்பு கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் மலைவாழ் மக்கள் மற்றும் பெண்கள் தயாரிக்கும் இயற்கைப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் உள்ளிட்டவை இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளன.

Video

தொழிலாளர்கள் கொட்டகையை சேதப்படுத்திய காட்டுயானை- கோவை அருகே பரபரப்பு…

கோவை: கட்டிட தொழிலாளர்கள் தங்கியிருந்த தகர கொட்டகையை சேதப்படுத்திய ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை துடியலூர் அடுத்துள்ள கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் நேற்று நள்ளிரவில் குடியிருப்புக்குள் புகுந்து வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த...