சர்க்கார் சாமக்குளம் அரசு பள்ளியில் புதிய அறிவியல் ஆய்வகம் திறப்பு…

கோவை: சர்க்கார் சாமக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 1.80 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட சி.ஆர்.சுவாமிநாதன் ஒருங்கிணைந்த அறிவியல் ஆய்வகத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திறந்து வைத்தார்.

Advertisement

கோயம்புத்தூர் மாவட்டம், சர்க்கார் சாமக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் CRI PUMP நிறுவனத்தின் பங்களிப்பில் ரூ.1.80 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட சி.ஆர்.சுவாமிநாதன் ஒருங்கிணைந்த அறிவியல் ஆய்வகத்தை நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் திறந்து வைத்து, பார்வையிட்டார்.

இந்நிகழ்வின்போது, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணபிரியாCRI நிறுவனத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் பாலசுந்தரம், பாலசுப்ரமணியம், சௌந்திரராஜன், விமலா மற்றும் பள்ளி தலைமையாசிரியர், மாணவ,மாணவியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது, அரசு பள்ளிகளின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் வகையில் தனியார் தொண்டு நிறுவனங்கள் அரசு பள்ளிகளுக்கு புதிய கட்டடங்கள் மற்றும் நவீன ஆய்வகங்கள் அமைத்து கொடுப்பது மிகவும் வரவேற்கத்தக்கதாகும்.

Advertisement

மேலும், தனியார் தொண்டு நிறுவனங்கள் அரசுப் பள்ளிகளின் தேவைகளை அறிந்து, சமூகப் பொறுப்புடன் கல்வி சார்ந்த பணிகளை மேற்கொள்வது பாராட்டுக்குரியது.

பள்ளிகளில் மாணவர்களுக்கு தேவையான வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகங்கள் மற்றும் அடிப்படை வசதிகள் ஏற்படுத்துவதன் மூலம் அவர்களின் கற்றல் திறனும் ஆர்வமும் மேலும் அதிகரிக்கும். குறிப்பாக மாணவர்கள் செய்முறை கல்வியை பெறுவதற்கு ஆய்வக வசதிகள் முக்கிய பங்காற்றுகின்றன.

Advertisement

மாணவர்களின் எதிர்காலத்தை சிறப்பாக உருவாக்குவதில் பள்ளிகளின் உள்கட்டமைப்பு முக்கியத்துவம் பெறுகிறதுஅரசு மேற்கொள்ளும் முயற்சிகளுடன் தனியார் நிறுவனங்களும் இணைந்து செயல்படும்போது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தரமான கல்வி மற்றும் சிறந்த கற்றல் சூழல் கிடைக்கும்.

CRI நிறுவனத்தின் RAA.C அமைப்பின் வாயிலாக சுமார் ரூ.1.80 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டுள்ள. இந்த ஒருங்கிணைந்த அறிவியல் ஆய்வகத்தில் இயற்பியல், வேதியியல், உயிரியல்கணினி அறிவியல் ஆய்வகங்கள் உள்ளன.

இதனை மாணவர்கள் முழுமையாக பயன்படுத்தி, கல்வியில் உயர்ந்த இலக்குகளை அடைய வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.

Amazon Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

மலைவாழ் மக்களின் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பு! கோவையில் சிறப்பு கண்காட்சி!

கோவை அவினாசி சாலையில் உள்ள சுகுணா திருமண மண்டபத்தில் செப்டம்பர் 12 மற்றும் 13 தேதிகளில் 162 ஸ்டால்களுடன் சிறப்பு கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் மலைவாழ் மக்கள் மற்றும் பெண்கள் தயாரிக்கும் இயற்கைப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் உள்ளிட்டவை இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளன.

Video

தொழிலாளர்கள் கொட்டகையை சேதப்படுத்திய காட்டுயானை- கோவை அருகே பரபரப்பு…

கோவை: கட்டிட தொழிலாளர்கள் தங்கியிருந்த தகர கொட்டகையை சேதப்படுத்திய ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை துடியலூர் அடுத்துள்ள கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் நேற்று நள்ளிரவில் குடியிருப்புக்குள் புகுந்து வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த...