மண்ட பத்தரம் பதாகைகளுடன் சென்ற பாஜகவினர் கைது

கோவை: கோவையில் மண்ட பத்தரம் என்ற பதாகையை வைக்கச் சென்ற பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்.

Advertisement

கோவை மாநகரில் சாலைகள் குண்டும் குழியுமாய் இருப்பதாகவும் எனவே சாலையில் செல்வோரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் பாஜக இளைஞரணி சார்பில் பதாகை வைக்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

சரவணம்பட்டி பகுதியில் உள்ள வணிக வளாகம் எதிரில் மண்ட பத்தரம் என்ற வாசகம், நடிகர் வடிவேலுவின் காமெடி புகைப்படத்துடன் பதாகையை வைக்கும் நிகழ்ச்சியை கோவை மாநகர பாஜக இளைஞர் அணி மாவட்ட தலைவர் கிருஷ்ணப்பிரசாத் தலைமையில் நடத்த இருந்தனர்.

Advertisement

இந்நிலையில் பதாகைகளுடன் பாஜகவினர் சென்ற போது காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Recent News

Video

மருதமலையில் விமர்சையாக நடைபெற்ற சூரசம்ஹாரம்

கோவை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சூரசம்ஹாரம் வெகு விமர்சியாக நடைபெற்றது. கந்தர் சஷ்டி விழாவில் முக்கிய நிகழ்வான முருகன் சூரபத்மனை வதம் செய்யும் சூரசம்காரம் நிகழ்ச்சி இன்று அனைத்து முருகன் கோவில்களிலும் வெகு...
Join WhatsApp