UG இடம் இருக்கு… நாளைக்கே வாங்க: அழைக்கிறது கோவை அரசு கலைக்கல்லூரி!

கோவை: கோவை அரசு கலைக்கல்லூரியில் இளங்கலை படிப்புகளுக்கான இறுதி கட்ட மாணவர் சேர்க்கை நாளை நடைபெற உள்ளதாக கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது.

கோவை அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி) 2025-2026 கல்வியாண்டிற்கான இறுதி கட்ட இளங்கலை (UG) சேர்க்கை நாளை (ஆகஸ்ட் 12) காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது.

Advertisement

கல்லூரியில் மொத்தம் 23 இளங்கலை படிப்புகள் (ஷிப்ட் 1 & 2) உள்ளன. முதல் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை இடங்கள் 1,727 என்ற எண்ணிக்கையில் இருந்த நிலையில், அரசு அறிவுறுத்தலின்படி தற்போது கூடுதலாக 20% இடங்கள் உயர்த்தப்பட்டன.

இதனால், மொத்தம் 1,961 இடங்கள் உள்ளன. இதில் 1,820 இடங்கள் ஏற்கனவே நிரம்பியுள்ளன. தற்போது 141 இடங்கள் மட்டுமே சில துறைகளில் காலியாக உள்ளன.

கோவை செய்திகள், அரசு, ரயில்வே மற்றும் மின்தடை அறிவிப்புகளுக்கு எங்கள் வாட்ஸ்-ஆப் குழுவில் இணைவீர். இணைய இங்கே சொடுக்கவும் 👈

Advertisement

பாரதியார் பல்கலைக்கழகம் ஆகஸ்ட் 14-ஐ யூ.ஜி., சேர்க்கைக்கான கடைசி நாளாக அறிவித்துள்ளதால், தகுதியும் ஆர்வமும் உள்ள மாணவர்கள் — விண்ணப்பித்திருந்தாலோ , இல்லையோ – அனைத்து அசல் சான்றிதழ்களுடன் நாளை (12.08.2025) காலை 9 மணிக்கு கலந்தாய்வில் பங்கேற்கலாம் என கல்லூரி முதல்வர் எம்.ஆர். எழிலி தெரிவித்துள்ளார்.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

சுந்தராபுரம், கிணத்துக்கடவு பகுதியில் கள ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர்…

கோவை: கோவை சுந்தராபுரம் கிணத்துக்கடவு பகுதியில் நேரடி ஆய்வு மேற்கொண்டார் கோவை மாவட்ட ஆட்சியர். கோயம்புத்தூர் மாநகராட்சி, தெற்கு மண்டலம் சுந்தராபுரம் பகுதியில் இயங்கி வரும் சமூக நீதி மாணவர் விடுதியினை மாவட்ட ஆட்சித்தலைவர்...

Latest News Coimbatore

Video

இளைஞர்கள் பைக் பேருந்தின் சக்கரத்தில் சிக்கிய அதிர்ச்சி வீடியோ உள்ளே…!

கோவை: கோவையில் அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கிய இளைஞர் நெஞ்சை பதற வைக்கும் பகீர் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி பரபரப்பு. கோவையில் இளைஞர்கள் வாகனங்களை இயக்குவது அதிகரித்து வருவதாக பொதுமக்கள் தொடர்ச்சியாகக் குற்றம்சாட்டி வருகின்றனர். முறையாக...