கோவையில் லாரியைத் திருடி விற்க முடியாமல் சுற்றிய நபர் போலீசில் சிக்கினார்!

கோவை: போத்தனூரில் லாரியை திருடிவிட்டு விற்க முடியாமல் சுற்றித்திரிந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கோவை கே ஜி சாவடி, பாலக்காடு ரோட்டை சேர்ந்தவர் அப்பாஸ்( வயது 47 ). சம்பவத்தன்று இவர் அவரது லாரியை போத்தனூர் அருகே, குறிச்சி பிரிவு ரோட்டில் உள்ள இரும்பு கம்பி நிறுவனம் அருகில் நிறுத்தி இருந்தார்.

அதன் பிறகு அவர் சென்று பார்த்த போது அவரது லாரியை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

Advertisement

இதுகுறித்து போத்தனூர் போலீஸ் நிலையத்தில் அப்பாஸ் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து லாரியையும் அதை திருடி சென்ற நபரையும் தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று அப்பாஸின் லாரியை போலீசார் போத்தனூர் அருகே மடக்கினார். அதை திருடி சென்ற சென்னையைச் சேர்ந்த தௌலத் பாஷா( வயது 35 ) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement

தவ்லத் பாஷா ஏற்கனவே ஆட்டோ திருடிய வழக்கில் கைதாகி சிறைக்கு சென்று உள்ளார்.
மீண்டும் வெளியே வந்த அவர், அப்பாஸின் லாரியை திருடி சென்று ஈரோடு அருகே பவானியில் விற்க முயன்று உள்ளார்.

ஆனால் திருட்டு லாரியை யாரும் வாங்காததால் மீண்டும் சுத்தி வந்துள்ளார். இந்த நிலையில் கோவை அருகே அவர் சென்றபோது போலீசார் மடக்கி கைது செய்தனர்.

Amazon Link 3
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

சஸ்பெண்ட் செய்ததை வாபஸ் பெறுக- வார்டு மக்களுடன் கோவை கவுன்சிலர் தர்ணா…

கோவை: தன்னை சஸ்பெண்ட் செய்ததை திரும்ப பெற வேண்டும் என்று வார்டு மக்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டார் காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரி... தன்னை களங்கப்படுத்தியதாக கூறி மாமன்ற கூட்டத்திலிருந்து சஸ்பெண்ட் செய்ததை திரும்ப பெற வேண்டும்...

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.