கோவையில் லாரியைத் திருடி விற்க முடியாமல் சுற்றிய நபர் போலீசில் சிக்கினார்!

கோவை: போத்தனூரில் லாரியை திருடிவிட்டு விற்க முடியாமல் சுற்றித்திரிந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement

கோவை கே ஜி சாவடி, பாலக்காடு ரோட்டை சேர்ந்தவர் அப்பாஸ்( வயது 47 ). சம்பவத்தன்று இவர் அவரது லாரியை போத்தனூர் அருகே, குறிச்சி பிரிவு ரோட்டில் உள்ள இரும்பு கம்பி நிறுவனம் அருகில் நிறுத்தி இருந்தார்.

அதன் பிறகு அவர் சென்று பார்த்த போது அவரது லாரியை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து போத்தனூர் போலீஸ் நிலையத்தில் அப்பாஸ் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து லாரியையும் அதை திருடி சென்ற நபரையும் தேடி வந்தனர்.

Advertisement

இந்த நிலையில் நேற்று அப்பாஸின் லாரியை போலீசார் போத்தனூர் அருகே மடக்கினார். அதை திருடி சென்ற சென்னையைச் சேர்ந்த தௌலத் பாஷா( வயது 35 ) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

தவ்லத் பாஷா ஏற்கனவே ஆட்டோ திருடிய வழக்கில் கைதாகி சிறைக்கு சென்று உள்ளார்.
மீண்டும் வெளியே வந்த அவர், அப்பாஸின் லாரியை திருடி சென்று ஈரோடு அருகே பவானியில் விற்க முயன்று உள்ளார்.

ஆனால் திருட்டு லாரியை யாரும் வாங்காததால் மீண்டும் சுத்தி வந்துள்ளார். இந்த நிலையில் கோவை அருகே அவர் சென்றபோது போலீசார் மடக்கி கைது செய்தனர்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

IAS அதிகாரிகள் குறித்து கோவையில் தவெக அமைச்சர் சர்ச்சை பேச்சு…

கோவை: தவெக ஆட்சியில் ஐஏஎஸ் அதிகாரிகள் அரசியல்வாதிகள் போல் பேசுகிறார்கள் என்று அமைச்சர் விஜய்பாலாஜி பேசியுள்ளார். கோவை அவிநாசி சாலை லீ மெரிடியன் நட்சத்திர ஹோட்டலில் தொழில்நுட்ப ஜவுளிக்கான இயக்கம் தொழில்நுட்ப ஜவுளி தொடர்பான...

Latest News Coimbatore

Video

இளைஞர்கள் பைக் பேருந்தின் சக்கரத்தில் சிக்கிய அதிர்ச்சி வீடியோ உள்ளே…!

கோவை: கோவையில் அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கிய இளைஞர் நெஞ்சை பதற வைக்கும் பகீர் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி பரபரப்பு. கோவையில் இளைஞர்கள் வாகனங்களை இயக்குவது அதிகரித்து வருவதாக பொதுமக்கள் தொடர்ச்சியாகக் குற்றம்சாட்டி வருகின்றனர். முறையாக...