அரசு மருத்துவமனையில் அநியாயம்: நோயாளிக்கு நேர்ந்த பரிதாபம்! – அதிர்ச்சி வீடியோ

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் ஊழியர்கள் டிரெச்சர் கொடுக்காததால், வயது முதிர்ந்த நோயாளியை அவரது உறவினர்கள் இழுத்துச் சென்ற காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

கோவை மட்டுமல்லாது சுற்றுப்புற மாவட்டங்களில் மற்றும் கேரள மாநிலத்தில் இருந்தும் வந்து சிகிச்சைபெறும் மருத்துவமனையாக உள்ளது.

கோவை அரசு மருத்துவமனை. இங்கு வரும் நோயாளிகளை ஊழியர்கள் கண்ணியக்குறைவாக நடத்துவதாக பல ஆண்டுகளாகவே புகார்கள் உள்ளது.

மேலும், முறையான அடிப்படை வசதிகள் இல்லை, மருந்து மாத்திரைகள் கிடைப்பதில்லை என்ற அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளும் உள்ளன.

Advertisement

இதனிடையே கோவை அரசு மருத்துவமனையில் ஊழியர்கள் ஸ்டிரெச்சர் கொண்டுவராததால் வயது முதிர்ந்த மாற்றுத்திறனாளி நோயாளி ஒருவரை அவரது உறவினர்கள், தோளில் சாய்த்தபடி இழுத்துச்சென்ற காட்சிகள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில், 2 மணி நேரமாக காத்திருந்தும் உதவி கிடைக்காததால் முதியவரை இவ்வாறு இழுத்து வரும் நிலை ஏற்பட்டதாக உறவினர்கள் குமுறுகின்றனர்.

Advertisement

தள்ளாத வயதில், பார்க்கவே பரிதாப நிலையில் இருக்கும் முதியவரின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், அவசரகதியில் ஊழியர்கள் இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளின் அவலங்கள் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பும் போதும், “ஆதாரமில்லாமல் பேசாதீர்கள்” என்று கூறிச்செல்வார்.

Flipkart Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

சூலூரில் கஞ்சா பறிமுதல்- ஒருவர் கைது…

கோவை: கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் சுமார் 4 கிலோ 800 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த கோவை மாவட்ட காவல்துறையினர் ஒருவரை கைது செய்தனர். போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள்...

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.