கோவை: மகளிர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2025 – ஆம் ஆண்டிற்கான நேரடி சேர்க்கை 30.09.2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மகளிர் விண்ணப்பிக்கலாம்.
நேரில் வருகை புரிவோருக்கு இந்நிலைய உதவி மையம் மூலம் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.
52 வயது வரை உள்ள பெண்கள் இந்த பயிற்சியில் சேரலாம். இதற்கு எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை.
இத்தொழிற்பயிற்சி நிலையத்தில் ஓராண்டுக்கு கற்றுத்தரப்படும் பயிற்சிகள்:
- Computer Operator
- Programming Assistant (COPA)
- Desktop Publishing Operator (DTPO)
- IoT Technician (Smart Health Care)
- Sewing Technology
- Instrument Mechanic (IM)
- Electronics Mechanic (EM)
- Information Technology (IT)
- Technician Medical Electronics (TME)
- Smart Phone Technician Cum App Tester
பயிற்சியில் தேர்ச்சி பெற்றால் மத்திய அரசின் தேசிய தொழிற்சான்றிதழ் (NCVT) வழங்கப்படும்.
அனைத்து பயிற்சியாளர்களுக்கும் வழங்கப்படும் நன்மைகள்:
மாதம் தலா ரூ.750/- உதவித்தொகை. மிதிவண்டி, சீருடை, தையற்கூலி, காலணி, பாடப்புத்தகங்கள், வரைபட கருவிகள். 30 கிலோமீட்டர் தொலைவு வரை இலவச பஸ்பாஸ்

மேலும், புதுமைப் பெண் திட்டம் கீழ் அரசுப் பள்ளியில் பயின்ற மகளிருக்கும், அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்ற மகளிருக்கும் கூடுதலாக மாதம் ரூ.1000/- வழங்கப்படுகிறது.
நவீன தொழிற்திறன்களை அறிந்து கொள்ளும் வகையில் Industrial Visit, Inplant Training, Internship Training வழங்கப்படுகிறது. மேலும், பயிற்சி முடிக்கும் தருவாயில் வளாக நேர்காணல் மூலம் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும்.
கூடுதல் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய கைபேசி எண்கள்:
98651 28182, 94990 55692, 88381 58132, 94422 39112
இதனை கோவை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இந்த தகவலை உங்கள் சுற்றுவட்டார மகளிருக்கு பகிர்ந்து உதவிடலாம்.