தடாகம் அருகே ரேஷன் கடையை சூறையாடிய யானை

கோவை: கோவை அருகே ஊருக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை ரேஷன் கடையை சேதப்படுத்தி அரிசியை சாப்பிட்டு சென்றுள்ளது.

கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தடாகம், மடத்தூர், பன்னிமடை, நஞ்சுண்டாபுரம் ஆகிய பகுதிகளில் வனப்பகுதிகளில் இருந்து அடிக்கடி வெளியேறும் காட்டு யானைகள் காட்டுபன்றிகள் ஊருக்குள் புகுந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தி செல்வது தொடர்கதையாக உள்ளது.

காட்டு யானையை வனப்பகுதியில் இருந்து வெளியேறாமல் கட்டுப்படுத்துவதற்கு வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்களும் விவசாயிகளும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். வனத்துறையினரும் இரவு நேரங்களில் ரோந்து பணிகளை மேற்கொண்டாலும் அவ்வப்போது இது போன்ற நிகழ்வுகள் நடைபெறுகிறது.

Advertisement

இந்நிலையில் இன்று அதிகாலை சுமார் 4 மணியளவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை மடத்தூர் இராமநாதபுரம் ஊருக்குள் சுற்றி திரிந்துள்ளது. மடத்தூர் பகுதிக்குள் சுற்றித்திரிந்த யானை ரேஷன் கடையை சேதப்படுத்தி அரிசியை சாப்பிட்டு சென்றுள்ளது. மேலும் ராமநாதபுரம் பகுதியில் தனியார் நபருக்கு சொந்தமான வாழை தோட்டத்தையும் சேதப்படுத்தி சென்றுள்ளது.

தற்பொழுது ரேஷன் கடையை யானை சேதப்படுத்திய காட்சிகள் வெளியாகி உள்ள நிலையில் யானைகளும் காட்டுப்பன்றிகளும் அடிக்கடி ஊருக்குள் நுழைந்து விவசாய நிலங்களை சேதப்படுத்துவதால் வனத்துறையினர் கூடுதல் கவனம் செலுத்தி தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

சஸ்பெண்ட் செய்ததை வாபஸ் பெறுக- வார்டு மக்களுடன் கோவை கவுன்சிலர் தர்ணா…

கோவை: தன்னை சஸ்பெண்ட் செய்ததை திரும்ப பெற வேண்டும் என்று வார்டு மக்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டார் காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரி... தன்னை களங்கப்படுத்தியதாக கூறி மாமன்ற கூட்டத்திலிருந்து சஸ்பெண்ட் செய்ததை திரும்ப பெற வேண்டும்...

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.