புரட்டாசி மாதம் முடிந்தும் வெறுச்சோடி காணப்பட்ட உக்கடம் மீன் மார்க்கெட்

கோவை: புரட்டாசி மாதம் முடிந்து முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று உக்கடம் மீன் மார்க்கெட்டில் பொதுமக்கள் வருகை குறைவாகவே இருந்ததால் பல்வேறு கடைகள் வெறுச்சோடி காணப்பட்டன.

வருடம் தோறும் புரட்டாசி மாதம் முடிந்து முதல் ஞாயிற்றுக்கிழமையில் இறைச்சி கடைகளிலும் மீன் கடைகளிலும் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படும். புரட்டாசி மாதத்தில் விரதம் இருபவர்கள் விரதத்தை முடித்து இறைச்சிகள் மற்றும் மீன்களை வாங்கி செல்வர்.

ஆனால் இந்த வருடம் புரட்டாசி மாதம் முடிந்த உடனேயே தீபாவளி பண்டிகை வருவதால், முதல் ஞாயிற்றுக்கிழமையான இன்று கோவை உக்கடம் மீன் மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. பல்வேறு மீன் கடைகள் வெறுச்சோடி காணப்பட்டன. சில கடைகளில் மட்டும் மக்கள் கூட்டம் காணப்பட்டது. அதே சமயம் புரட்டாசி மாதத்தை விட தற்போது மீன் வரத்து குறைந்துள்ளதால் விலை சற்று உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர் .

மத்தி கிலோ 80-250 ரூ, வாவல் 250-500ரூ, பாறை 240- 350ரூ, வஞ்சரம் 450-700ரூ, நண்டு- 500ரூ, அயிலை 120 ரூ க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

புரட்டாசி மாதத்தில் மீன் வரத்து அதிகமாகவும் விலை குறைவாகவும் இருந்ததாகவும் ஆனால் தற்போது மீன் வரத்து குறைவானதால் விலை சற்று அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். மேலும் நாளை தீபாவாளி பண்டிகை என்பதால் மக்கள் குறைவாகவே வருவதாகவும் நாளை துவங்கி மக்கள் கூட்டம் அதிகரிக்க கூடும் என்று எதிர்ப்பார்ப்பதாக தெரிவித்தனர்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

கோவையில் அமலுக்கு வந்தது தேர்தல் நடத்தை விதிகள்…

கோவை: கோவையில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவித்ததை தொடர்ந்து மாநிலம் முழுவதும் தேர்தல்...

Video

கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்து திருப்தியாக சாப்பிட்டு சென்ற யானை…

கோவை: கோவையில் CRPF வளாகத்திற்குள் நுழைந்த யானை சமையலறையில் இருந்த அரிசி, மாவு உள்ளிட்ட பொருட்களை சாப்பிட்டு சென்ற வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சாலை கதிர்நாயக்கன்பாளையம் பகுதியில் மத்திய...