கோவை சிறையில் போக்சோ வழக்கு கைதி மரணம்!

கோவை: சிறார்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் (போக்சோ) கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த நபர் உயிரிழந்தார்.

Advertisement

நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்தவர் அப்துல் நாசர் (48). இவர் கடந்த 2017ம் ஆண்டு கூடலூர் போலீசாரால் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார்.

பின்னர் 2021ம் ஆண்டு கோவை மத்திய சிறையில் தண்டனை கைதியாக அடைக்கப்பட்டார். இந்த நிலையில் அப்துல் நாசர் கடந்த சில மாதங்களாக உடல் நிலை சரியில்லாமல் அவதி அடைந்து வந்தார்.

நேற்று சிறையில் இருந்த அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த சிறை போலீசார் அவரை மீட்டு சிறை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

Advertisement

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் படி அறிவுறுத்தி உள்ளனர். இதையடுத்து போலீசார் அவரை கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Amazon Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் மாதத்திற்கான காளான் வளர்ப்பு பயிற்சி தேதி அறிவிப்பு…

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் மாதத்திற்கான காளான் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. கோவையில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பயிர் நோயியல் துறை சார்பாக ஒவ்வொரு மாதமும் காளான் வளர்ப்பு சம்பந்தமான ஒரு...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...