ஓடும் ரயிலில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை- கோவை காவலர் பணியிடை நீக்கம்…

கோவை: ஓடும் ரயில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

Advertisement

சென்னையில் இருந்து கோவை வந்த ரயிலில் சட்டக் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கோவையை சேர்ந்த காவலரை பணியிடை நீக்கம் செய்து கோவை மாநகர காவல் துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

கோவை ஆர் எஸ் புரம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிபவர் சேக் முகமது. கடந்த சனிக்கிழமையன்று சென்னையில் இருந்து இன்டர்சிட்டி ரயிலில் கோவைக்கு வந்துள்ளார்.

அப்பொழுது சட்டக் கல்லூரியில் பயிலும் கல்லூரி மாணவி ஒருவரும் அதே ரயிலில் வந்துள்ளார். மாணவியின் அருகில் அமர்ந்திருந்த காவலர் சேக் முகமது மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

Advertisement

காவலரின் செயலால் அதிர்ச்சி அடைந்த மாணவி உடனடியாக அவரது செல்போனில் வீடியோ பதிவு செய்துள்ளார். பின்னர் அந்த ரயில் காட்பாடி அருகே வரும் பொழுது ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து காட்பாடி ரயில் நிலையத்தில் சேக் முகமதுவை ரயில்வே காவல்துறையினர் இறங்க செய்து காட்பாடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

இந்நிலையில் மாணவி எடுத்திருந்த வீடியோ பதிவுகளின் அடிப்படையிலும் புகார் அளிக்கப்பட்டதன் அடிப்படையிலும் ஷேக் முகமதுவை பணியிடை நீக்கம் செய்து கோவை மாநகர துணை காவல் ஆணையர் கார்த்திகேயன் உத்தரவு பிறப்பித்தார்.

Flipkart Link 1
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் மாதத்திற்கான காளான் வளர்ப்பு பயிற்சி தேதி அறிவிப்பு…

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் மாதத்திற்கான காளான் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. கோவையில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பயிர் நோயியல் துறை சார்பாக ஒவ்வொரு மாதமும் காளான் வளர்ப்பு சம்பந்தமான ஒரு...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...