கோவையில் கோர விபத்து: தாய், மகள் பரிதாப பலி!

கோவை: குனியமுத்தூர் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் தாய், மகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

கோவை சுகுணாபுரம் அருகே உள்ள மாட்டுக்கார கோவில் தெருவைச் சேர்ந்தவர் தனபால். இவரது மனைவி சாந்தி (வயது 48).

இவர்களது மகள் ஞானஸ்ரீ (வயது 24). ஞானஸ்ரீக்கு திருமணம் ஆகிவிட்டது பிரதீப் என்ற கணவர் உள்ளார்.

இந்த நிலையில் இவர்கள் உறவினர் வீட்டு நிகழ்ச்சி பாலக்காடு அருகே நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக சாந்தியும் ஞானஸ்ரீ-ம் ஸ்கூட்டரில் சென்றனர். ஸ்கூட்டரை ஞானஸ்ரீ ஓட்டினார்.

Advertisement

இவர்களுடன் அதே பகுதியைச் சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவியும் சென்றுள்ளார்.

உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு மீண்டும் 3 பேரும் மோட்டார் சைக்கிளில் திரும்பினர். அவர்களது வாகனம் பாலக்காடு ரோட்டில்,குனியமுத்தூர் அருகே பி.கே.புதூர் பகுதியில் ஒரு மார்பிள்ஸ் கடை அருகில் சென்ற போது மோட்டார் சைக்கிள் திடீரென நிலைத்திடுமாறி அருகில் உள்ள சாலை தடுப்புச் சுவரில் பயங்கரமாக மோதியது.

Advertisement

இதில் ஞான ஸ்ரீ சாந்தி ஆகியோர் படுகாயமடைந்தனர். இருவரும்
ஹெல்மெட் அணிந்திருந்தும் ஞானஸ்ரீக்கு தலையில் பலத்த அடி ஏற்பட்டதால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

சாந்தி, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இந்த விபத்தில் கல்லூரி மாணவி காலில் காயம் ஏற்பட்டது.

அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து போக்குவரத்து மேற்கு புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Flipkart Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

சஸ்பெண்ட் செய்ததை வாபஸ் பெறுக- வார்டு மக்களுடன் கோவை கவுன்சிலர் தர்ணா…

கோவை: தன்னை சஸ்பெண்ட் செய்ததை திரும்ப பெற வேண்டும் என்று வார்டு மக்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டார் காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரி... தன்னை களங்கப்படுத்தியதாக கூறி மாமன்ற கூட்டத்திலிருந்து சஸ்பெண்ட் செய்ததை திரும்ப பெற வேண்டும்...

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.