தீபாவளி பண்டிகையையொட்டி கோவையில் சாலையோர கடைகளில் வியாபாரம் ஜோர்…

கோவை: நாளை மறுநாள் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் சாலையோர கடைகளில் இறுதி நேர ஷாப்பில் களைகட்டியது.

நாளை மறுநாள் திங்கட்கிழமை தீபாவளி பண்டியானது கொண்டாடப்பட உள்ள நிலையில் மக்கள் அனைவரும் விறுவிறுப்பாக புத்தாடைகள், பட்டாசுகளை வாங்கி செல்கின்றனர்.

கடந்த ஒரு வார காலமாகவே விற்பனையானது அதிகளவு நடைபெற்று வரும் நிலையில் இறுதி கட்ட விற்பனையானது கோவையில் களைகட்டியது. குறிப்பாக சாலையோர கடைகளில் மக்கள் கூட்டம் அதிகளவு காணப்பட்டது.

சாலையோர கடைகளில் விற்பனை செய்யப்படும் அணிகலன்கள் ஆன கம்மல், வளையல், தோடு, வண்ண வண்ண பொட்டுகள், காலணிகள், ஆகியவற்றை பொதுமக்கள் அதிக அளவு வாங்கிச் சென்றனர். இதனால் டவுன்ஹால் பகுதியில் சாலையோர கடைகளில் மக்கள் கூட்டம் அதிகளவு காணப்பட்டது.

கடந்த ஒரு வார காலமாக மதியத்திற்கு மேல் கனமழை பெய்து வந்த நிலையில் இன்று மழை இல்லாததால் அதிகப்படியான மக்கள் பொருட்களை வாங்க ஆர்வமுடன் வந்தனர். மேலும் வியாபாரிகளும் மழை இல்லாததால் வியாபாரம் நன்கு நடப்பதாக தெரிவித்தனர்.

Recent News

கோவையில் ரோட்டில் குப்பை வீசினால் நோட்டீஸ்- மாநகராட்சி நிர்வாகத்தின் எச்சரிக்கை…

கோவை: கோவை மாநகரில் குப்பைகளை ரோட்டில் வீசுவோருக்கு எச்சரிக்கை நோட்டீஸை மாநகராட்சி நிர்வாகம் அனுப்புகிறது. கோவை மாநகராட்சி பகுதியில் பொது இடங்களில் திறந்தவெளியில் குப்பை கொட்டுவதை தவிர்க்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. அவற்றை...

Video

தடாகம் அருகே அரிசியை ருசிபார்த்த யானை- அதிர்ச்சி காட்சிகள்…

கோவை: தடாகம் அருகே தோட்டத்து வீட்டில் வைத்திருந்த அரிசியை காட்டு யானை தின்று செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளான தடாகம், வரபாளையம், தாளியூர்,...
Join WhatsApp