முதலீடு பணத்திற்கு அதிக வட்டி தருவதாக வாலிபரிடம் ரூ.1.01 கோடி மோசடி- ரியல் எஸ்டேட் அதிபர் மீது வழக்கு…

கோவை: அதிக வட்டி தருவதாக வாலிபரிடம் ரூ.1.01 கோடி மோசடி செய்த ரியல் எஸ்டேட் அதிபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வங்காரம்பேட்டையை சேர்ந்தவர் அருணாகிரி (33). சொந்தமாக தொழில் செய்து வருகிறார். இவருக்கு கோவை பாலசுந்தரம் ரோடு பாப்பநாயக்கன் பாளையத்தில் தனியார் நிதி நிறுவனம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் அசோக்குமார் என்பவர் அறிமுகமாகி உள்ளார்.

அவர் அருணாகிரியிடம் தான் கடந்த 25 வருடங்களாக ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாகவும், தான் நடத்தி வரும் நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
இதை நம்பி அருணாகிரி அந்த நிறுவனத்தில் ரூ.1 கோடியே 1 லட்சத்து 20 ஆயிரத்தை முதலீடு செய்துள்ளார்.

அதன் பின்னர் அவர், அருணாகிரி முதலீடு செய்த பணத்தையும், அசோக்குமார் தருவதாக கூறிய கூடுதல் வட்டியையும் தரவில்லை. அசோக்குமாரை சந்தித்தும், போன் மூலம் தொடர்பு கொண்டும், அருணாகிரி தான் கட்டிய பணத்தை பல முறை திருப்பி கேட்டுள்ளார். ஆனால் அவர் எந்தவி த பதிலும் சொல்லாமல் அருணாகிரியை ஏமாற்றி வந்துள்ளார். மேலும், அவருடன் சேர்த்து 51 முதலீட்டாளர்கள் ரூ.3 கோடியே 18 லட்சத்து 20 ஆயிரம் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது.

Advertisement

இதையடுத்து அருணாகிரி கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் நிதி நிறுவனம் மற்றும் ரியல் எஸ்டேட் அதிபர் அசோக்குமார் மீது வழக்கு பதிவு செய்து விசாணை நடத்தி வருகின்றனர். மேலும், அசோக்குமார் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க போலீசார் அழைப்பு விடுத்துள்ளனர்.

Advertisement

Flipkart Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

தமிழ்நாடு பாடத்திட்டம் எப்படி இருக்கும்?- மயில்சாமி அண்ணாதுரை கூறிய தகவல்…

கோவை: அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் மாணவர்களை தயார்படுத்தும் வகையில் பாடத்திட்டம் உருவாக்கப்படும் என மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார். கோவை ஸ்ரீ அபிராமி கல்வி நிறுவனங்களின் 15-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. மருத்துவர் பெரியசாமி தலைமையில்...

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.