கோவையில் விமானப்படை தீயணைப்பு ஒத்திகை…

கோவை: கோவை சூலூர் பெரிய குளத்தில் இந்திய விமானப்படை தீயணைப்பு பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.

பேரிடர் காலங்களில் ஏற்படக் கூடிய தீ விபத்துகளை திறம்படக் கட்டுப்படுத்தும் நோக்கில், கோவை சூலூரில் அமைந்து உள்ள இந்திய விமானப்படைத் தளம் சார்பில் சிறப்பு தீயணைப்பு பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.

Advertisement

இந்த ஒத்திகையின் ஒரு பகுதியாக, தீ விபத்து நேரங்களில் ஹெலிகாப்டர்கள் மூலம் நீர்நிலைகளில் இருந்து தண்ணீரை எடுத்துச் சென்று தீயை அணைக்கும் முறைகள் செய்முறைப்படுத்தப்பட்டன.

இதற்காக, சூலூர் பெரிய குளத்திற்கு வந்த விமானப்படை ஹெலிகாப்டர், குளத்தின் மேலே தாழ்வாக பறந்து ‘பாம்பி பக்கெட்’ எனப்படும் ராட்சத கலன்கள் மூலம் தண்ணீரைச் சேகரித்தது. பின்னர், அந்தத் தண்ணீரை விமானப்படைத் தளத்திற்கு எடுத்துச் சென்று அங்கு அமைக்கப்பட்டு உள்ள கொள்கலன்களில் நிரப்பி ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது.

ஹெலிகாப்டர் மூலம் குளத்திலிருந்து தண்ணீர் எடுக்கப்பட்ட காட்சியைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள், கரையோரங்களில் திரண்டு ஆர்வத்துடன் பார்வையிட்டு ரசித்தனர்.

Advertisement

இந்த பாதுகாப்பு ஒத்திகையின் போது எவ்வித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் இருக்க, விமானப்படைப் பிரிவினர் குளத்தைச் சுற்றி உள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு இருந்தனர்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

சுந்தராபுரம், கிணத்துக்கடவு பகுதியில் கள ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர்…

கோவை: கோவை சுந்தராபுரம் கிணத்துக்கடவு பகுதியில் நேரடி ஆய்வு மேற்கொண்டார் கோவை மாவட்ட ஆட்சியர். கோயம்புத்தூர் மாநகராட்சி, தெற்கு மண்டலம் சுந்தராபுரம் பகுதியில் இயங்கி வரும் சமூக நீதி மாணவர் விடுதியினை மாவட்ட ஆட்சித்தலைவர்...

Latest News Coimbatore

Video

இளைஞர்கள் பைக் பேருந்தின் சக்கரத்தில் சிக்கிய அதிர்ச்சி வீடியோ உள்ளே…!

கோவை: கோவையில் அரசு பேருந்து சக்கரத்தில் சிக்கிய இளைஞர் நெஞ்சை பதற வைக்கும் பகீர் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி பரபரப்பு. கோவையில் இளைஞர்கள் வாகனங்களை இயக்குவது அதிகரித்து வருவதாக பொதுமக்கள் தொடர்ச்சியாகக் குற்றம்சாட்டி வருகின்றனர். முறையாக...