கோவையில் அடுக்குமாடிக் குடியிருப்பில் பெண்களை வைத்து விபசாரம்!

கோவை: கோவையில் அடுக்குமாடிக் குடியிருப்பில் பெண்களை வைத்து விபசாரம் செய்த பெண் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement

புலியகுளம் தாமு நகரைச் சேர்ந்தவர் 41 வயது நபர். இவர் சம்பவத்தன்று மதியம் சரவணம்பட்டியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவரை வழிமறித்த வாலிபர் ஒருவர், தன்னிடம் அழகான பெண் இருப்பதாகவும், பணம் கொடுத்தால் உல்லாசமாக இருக்கலாம் என்றும் கூறியுள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த நபர் சரவணம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று அந்த வாலிபரை மடக்கிப் பிடித்து விசாரித்தபோது, அடுக்குமாடிக் குடியிருப்பில் விபசாரம் செய்வது தெரியவந்தது.

Advertisement

தொடர்ந்து அந்த வாலிபரை சரவணம்பட்டி சக்தி சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பிற்கு அழைத்துச் சென்றனர். அங்கு பெண்களை வைத்து விபசாரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய தூத்துக்குடியைச் சேர்ந்த 24 வயது பெண்ணை பிடித்தனர்.

இதையடுத்து வழக்குப் பதிவு செய்து விபசாரத்திற்கு அழைத்த புரோக்கர் திருச்சியை சேர்ந்த சந்தோஷ் (26) மற்றும் அந்த பெண்ணைக் கைது செய்து, சிறையில் அடைத்தனர். அங்கிருந்து தப்பியோடிய மற்றொரு பெண்ணை வலைவீசி தேடி வருகின்றனர்.

Advertisement

Amazon Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

ஆடி 3வது வெள்ளி ஸ்பெஷல்… இறந்த சுமங்கலி வழிபாடு… அதுவும் இந்த நிற ஆடையில்…. வாழ்க்கையே மாறிப்போகும்!

ஆடி மாதம் எப்போதுமே அம்மனுக்கு மிகவும் உகந்த விரத நாட்களாகும். இந்த மாதங்களில் வரும் வெள்ளிக்கிழமைகளில் அதிகாலை விரதம் இருந்து வழிபாடு நடத்தினால், நமக்கும், நமது குடும்பத்திற்கும் ஏற்பட்ட எப்படிபட்ட துன்பமும் தீர்ந்து...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...