கோவையில் முதன்முறையாக ‘குளு குளு’ ஏசி பஸ் ஸ்டாண்ட்! – வீடியோ

கோவை: கோவையில் முதன்முறையாக குளிர்சாதன வசதியுடன் கூடிய பஸ் ஸ்டாண்ட், மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

Advertisement

தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரமான கோவை பல்வேறு தொழில்கள் மற்றும் துறைகளில் வேகமாக முன்னேறி வருகிறது. தொழில் வளர்ச்சியும் கல்வி நிறுவனங்களின் அதிகரிப்பும் காரணமாக மக்கள் தொகையும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதனால் மாவட்ட நிர்வாகம் பல்வேறு உட்கட்டமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

தற்போது கோடைகாலம் தொடங்கியுள்ள நிலையில் கோவையில் வெயில் அதிகரித்து வருகிறது. இதனால் பேருந்துக்காக காத்திருக்கும் பொதுமக்கள் கடும் அவதியை சந்தித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சூலூர் பேரூராட்சி மற்றும் எல்.ஜி மருத்துவமனை இணைந்து சூலூர் பேருந்து நிலையம் அருகே குளிர்சாதன வசதியுடன் கூடிய பஸ் ஸ்டாண்ட் அமைத்துள்ளன.

Advertisement

ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஏசி பஸ் ஸ்டாண்ட், கோவையிலேயே முதன்முறையாக உருவாக்கப்பட்ட குளிர்சாதன வசதியுடன் கூடிய பேருந்து நிலையமாக அமைந்துள்ளது.

https://www.youtube.com/shorts/7h5kCjv86ng

Advertisement

பேருந்திற்காக காத்திருக்கும் பயணிகள் இந்த குளுகுளு ஏசி பஸ் ஸ்டாண்டில் அமர்ந்து காத்திருந்து, தங்களுக்குரிய பேருந்து வந்ததும் ஏறி சுலபமாக புறப்பட்டுச் செல்லலாம் என அங்கு இருந்த பொதுமக்கள் தெரிவித்தனர்.

Amazon Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

2 COMMENTS

Comments are closed.

Recent News

ஆடி 3வது வெள்ளி ஸ்பெஷல்… இறந்த சுமங்கலி வழிபாடு… அதுவும் இந்த நிற ஆடையில்…. வாழ்க்கையே மாறிப்போகும்!

ஆடி மாதம் எப்போதுமே அம்மனுக்கு மிகவும் உகந்த விரத நாட்களாகும். இந்த மாதங்களில் வரும் வெள்ளிக்கிழமைகளில் அதிகாலை விரதம் இருந்து வழிபாடு நடத்தினால், நமக்கும், நமது குடும்பத்திற்கும் ஏற்பட்ட எப்படிபட்ட துன்பமும் தீர்ந்து...

Video

தடாகம் அருகே உணவு தேடி வீட்டின் கேட்டை சாதுரியமாக திறந்த காட்டுயானை-வைரல் சிசிடிவி காட்சிகள்…

கோவை: கோவையில் வீட்டின் கேட்டை லாவகமாக திறந்து உள்ளே சென்று அதே கேட் வழியில் வெளியே வந்த காட்டு யானையின் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலையில் அதிகளவு வனவிலங்குகள்...