கோவையில் வங்கி ஊழியர்கள் சங்கம் வேலை நிறுத்தப் போராட்டம்…

கோவை: அனைத்திந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது.

Advertisement

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்திந்திய வங்கி ஊழியர் சங்கம் சார்பில் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நாடு தழுவிய அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் வேலை நிறுத்தம் நடைபெறுகிறது. அதன்படி கோவையில் ரயில் நிலையம் எதிரில் உள்ள பேங்க் ஆப் பரோடா வங்கி கிளையில் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. இதில் இச்சங்கத்தை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இந்தப் போராட்டத்தில் வங்கிகளின் லாபத்தில் உரிய பங்கினை வழங்க வேண்டும், PLI உடனடியாக வழங்க வேண்டும், பதினோராவது இருதரப்பு ஒப்பந்தத்தில் ஏற்றுக் கொண்ட படி ஐந்து நாள் வேலை திட்டத்தை அமல்படுத்த வேண்டும், பொதுத்துறை வங்கிகள் 2 லட்சம் கோடி லாபம் ஈட்டிய பிறகும் நிதி அமைச்சகம் கோரிக்கைகளை சிறுமைப்படுத்துவதற்கு கண்டனம், வங்கிப் பணிகளுக்கு வெளி ஆட்களை அனுமதிக்கக் கூடாது,

Advertisement

தற்காலிக பணியாளர்களை உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும் வங்கி ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

கோவையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி உடனடியாக தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்.

Advertisement

Amazon Link 3
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

மலைவாழ் மக்களின் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பு! கோவையில் சிறப்பு கண்காட்சி!

கோவை அவினாசி சாலையில் உள்ள சுகுணா திருமண மண்டபத்தில் செப்டம்பர் 12 மற்றும் 13 தேதிகளில் 162 ஸ்டால்களுடன் சிறப்பு கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் மலைவாழ் மக்கள் மற்றும் பெண்கள் தயாரிக்கும் இயற்கைப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் உள்ளிட்டவை இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளன.

Video

தொழிலாளர்கள் கொட்டகையை சேதப்படுத்திய காட்டுயானை- கோவை அருகே பரபரப்பு…

கோவை: கட்டிட தொழிலாளர்கள் தங்கியிருந்த தகர கொட்டகையை சேதப்படுத்திய ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை துடியலூர் அடுத்துள்ள கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் நேற்று நள்ளிரவில் குடியிருப்புக்குள் புகுந்து வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த...