வாகன சோதனையில் சிக்கிய லாரி..! கோவையில் 10 கிலோ கஞ்சா பறிமுதல்..!

கோவை:கோவையில் லாரியில் கடத்தி வந்த 10 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, சரித்திர பதிவேடு குற்றவாளிகள் 2 பேரை கைது செய்துள்ளனர்.

Advertisement

கோவை சுங்கம் பகுதியில் நேற்று போலீசார் ரோந்து மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர்.

லாரியில் இருந்த 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகமடைந்த போலீசார் வாகனத்தை தீவிரமாக சோதனை செய்தனர்.

அதில், லாரியில் 10 கிலோ கஞ்சா மறைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Advertisement

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் வெளிமாநிலத்தில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து சுங்கம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (28), அருண்குமார் (30) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

Advertisement

மேலும், கைது செய்யப்பட்ட இருவரும் சரித்திர பதிவேடு குற்றவாளிகள் பட்டியலில் இடம்பெற்றவர்கள் என்றும், அவர்கள் மீது 10க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

Flipkart Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

மலைவாழ் மக்களின் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பு! கோவையில் சிறப்பு கண்காட்சி!

கோவை அவினாசி சாலையில் உள்ள சுகுணா திருமண மண்டபத்தில் செப்டம்பர் 12 மற்றும் 13 தேதிகளில் 162 ஸ்டால்களுடன் சிறப்பு கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் மலைவாழ் மக்கள் மற்றும் பெண்கள் தயாரிக்கும் இயற்கைப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் உள்ளிட்டவை இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளன.

Video

தொழிலாளர்கள் கொட்டகையை சேதப்படுத்திய காட்டுயானை- கோவை அருகே பரபரப்பு…

கோவை: கட்டிட தொழிலாளர்கள் தங்கியிருந்த தகர கொட்டகையை சேதப்படுத்திய ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை துடியலூர் அடுத்துள்ள கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் நேற்று நள்ளிரவில் குடியிருப்புக்குள் புகுந்து வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த...