ரேஷன் கார்டில் பயோ மெட்ரிக்; கோவையில் சிறப்பு முகாம்… நீங்க பண்ணிட்டீங்களா?

கோவை: கோவை மாவட்டத்தில் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகளில் 2.50 லட்சம் பேர் பயோ மெட்ரிக் பதிவு செய்யாத நிலையில், 2 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

கோவை மாவட்டத்தில் 11.50 லட்சம் ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் உள்ளன. 1,453 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கார்டுதாரர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் அரிசி, கோதுமை, பாமாயில், சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், ஸ்மார்ட் கார்டில் இடம்பெற்றுள்ள குடும்ப உறுப்பினர்களில் யாராவது உயிரிழந்தாலும், அவர்களின் பெயர் கார்டில் இருந்து நீக்கப்படாமல் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் கார்டில் உள்ள அனைத்து குடும்ப உறுப்பினர்களிடமிருந்தும் பயோ மெட்ரிக் பதிவு பெற நடவடிக்கை எடுக்கப்பட்டது.

கோவை மாவட்டத்தில் மொத்த குடும்ப உறுப்பினர்களில் 96 சதவீதம் பேரிடம் பயோ மெட்ரிக் பதிவு பெறப்பட்டுள்ளது. விடுபட்டவர்களை கண்டறிந்து பதிவு செய்யும் வகையில், ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாகச் சென்று கைரேகை மற்றும் கருவிழி ரேகை பதிவுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

இந்நிலையில், தற்போது வரை 2.50 லட்சம் பேர் பயோமெட்ரிக் பதிவு செய்யாமல் உள்ளனர். இதனால், பொதுமக்கள் பதிவு செய்ய வசதியாக இன்றும் (சனி), நாளையும் (ஞாயிறு) சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.

Also Read: கிணத்துக்கடவு கொடூரம்: இருவர் கைது; ஒருவருக்கு கை முறிவு!

Advertisement

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில்,

“கோவை மாவட்டத்தில் 4 லட்சம் பேர் தங்களது கைரேகை அல்லது கருவிழி ரேகையை பதிவு செய்யாமல் இருந்தனர். மாவட்ட நிர்வாகம் மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக, ரேஷன் கார்டு உறுப்பினர்களிடமிருந்து பயோமெட்ரிக் பதிவு பெறும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.

இதன் மூலம் இதுவரை 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் தங்களது கைரேகையை பதிவு செய்துள்ளனர். கடந்த 2-ஆம் தேதி நடைபெற்ற சிறப்பு முகாமில் மட்டும் 14 ஆயிரம் பேர் பதிவு செய்தனர். இன்னும் பதிவு செய்யாதவர்களுக்காக இன்றும், நாளையும் 2 நாட்கள் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது” என்றார்.

Also Read: வெண்டைக்காய் விலை எப்படி இருக்கும்? விவசாயிகளுக்கு TNAU முக்கிய கணிப்பு

Amazon Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

Latest News Coimbatore | கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை மாவட்டத்தின் முக்கிய அரசியல், குற்றம், வானிலை, போக்குவரத்து மற்றும் உள்ளூர் நிகழ்வுகளின் உடனடி செய்திகளை அறிந்து கொள்ளுங்கள்.

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.