4 பவுன் செயின் பறிப்பு… சிக்கிய கோவையை சேர்ந்த கல்லூரி காதலர்கள்!

கோவை: கோவை வெள்ளலூரில் வயதான பெண்ணிடம் கிளினிக் திறக்கும் நேரம் குறித்து பேச்சுக் கொடுத்து, அவரது கவனத்தை திசைதிருப்பி 4 பவுன் தங்கச் செயினை பறித்த வழக்கில் கல்லூரி காதலர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து நகை, 2 செல்போன்கள் மற்றும் குற்றத்துக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Advertisement

வெள்ளலூர் கறிக்கடை பேருந்து நிறுத்தம் அருகே கடந்த 30-ம் தேதி மாலை சரஸ்வதி என்பவர் உறவினர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது மாஸ்க் அணிந்த இளைஞர் ஒருவர் அவரிடம் வந்து, “அருகில் உள்ள கிளினிக் எப்போது திறக்கும்?” என கேட்டுள்ளார்.

அதற்கு சரஸ்வதி பதிலளித்துக் கொண்டிருந்த நிலையில், அந்த இளைஞர் மருத்துவரின் வீடு எங்கு உள்ளது என்றும் விசாரித்துள்ளார். அவர் வழியைக் காட்டிய அடுத்த நொடியே, எதிர்பாராத சம்பவம் நடந்துள்ளது.

திடீரென சரஸ்வதியின் கழுத்தில் இருந்த சுமார் 4 பவுன் தங்கச் செயினை பறித்த அந்த நபர், இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். அதிர்ச்சியில் நிலைதடுமாறி கீழே விழுந்த சரஸ்வதியை அருகிலிருந்தவர்கள் மீட்டனர்.

Advertisement

புகாரின் பேரில் போத்தனூர் போலீசார் விசாரணையை தொடங்கினர். சம்பவ இடம் மட்டுமின்றி, கொள்ளையன் தப்பிச் சென்ற வழித்தடங்களில் பதிவான சிசிடிவி காட்சிகளையும் தனிப்படை போலீசார் தீவிரமாக ஆய்வு செய்தனர்.

அதில், குற்றத்துக்கு பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் டிவிஎஸ் ஜூபிடர் வாகனத்தின் பதிவு எண் TN 99 AD 4548 போலீசாருக்கு முக்கிய தடயமாக கிடைத்தது.

Advertisement

இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், இந்த நகைப்பறிப்பின் பின்னணியில் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. வயதான பெண்களை குறிவைத்து நகைகளை பறிக்க கல்லூரி மாணவியும், மாணவனும் திட்டமிட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஆடம்பர வாழ்க்கைக்காகவும், மாணவனின் கடனை அடைப்பதற்காகவும் இருவரும் நகைப்பறிப்பில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று மாணவன் மாஸ்க் அணிந்து சென்று சரஸ்வதியிடம் பேச்சுக் கொடுத்து கவனத்தை திசைதிருப்பியதும், பின்னர் செயினை பறித்துச் சென்றதும் விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் முதலில் கல்லூரி மாணவி கைது செய்யப்பட்டார். அவரிடம் கிடைத்த தகவலின் பேரில், கே.ஜி. சாவடி அருகே உள்ள தனியார் கல்லூரி விடுதியில் தங்கியிருந்த மாணவனையும் போலீசார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட இருவரிடமிருந்து சுமார் 4 பவுன் தங்கச் செயின், 2 செல்போன்கள் மற்றும் நகைப்பறிப்புக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கிளினிக் குறித்து சாதாரணமாக பேச்சை தொடங்கிய சம்பவம், சில நொடிகளில் நகைப்பறிப்பாக மாறிய நிலையில், சிசிடிவி காட்சிகள் மூலம் கல்லூரி காதலர்களின் திட்டத்தை போலீசார் முறியடித்துள்ளனர்.

Flipkart Link 2
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

மலைவாழ் மக்களின் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பு! கோவையில் சிறப்பு கண்காட்சி!

கோவை அவினாசி சாலையில் உள்ள சுகுணா திருமண மண்டபத்தில் செப்டம்பர் 12 மற்றும் 13 தேதிகளில் 162 ஸ்டால்களுடன் சிறப்பு கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் மலைவாழ் மக்கள் மற்றும் பெண்கள் தயாரிக்கும் இயற்கைப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் உள்ளிட்டவை இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளன.

Video

தொழிலாளர்கள் கொட்டகையை சேதப்படுத்திய காட்டுயானை- கோவை அருகே பரபரப்பு…

கோவை: கட்டிட தொழிலாளர்கள் தங்கியிருந்த தகர கொட்டகையை சேதப்படுத்திய ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை துடியலூர் அடுத்துள்ள கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் நேற்று நள்ளிரவில் குடியிருப்புக்குள் புகுந்து வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த...