கோவை மக்களே குளிருதா? அடுத்த 5 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு!

கோவை: கோவையில் அடுத்த ஐந்து நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

கோவையில் டிசம்பர் 12 முதல் 16 வரை பெரும்பாலும் பகுதி மேகமூட்டத்துடன் கூடிய வானிலை தொடரும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Advertisement

பகலில் வெப்பம் சற்றே அதிகமாக இருந்தாலும், இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் குளிர்ச்சியான சூழல் நிலவ வாய்ப்பு உள்ளது.

டிசம்பர் 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் வானம் பகுதி மேகமூட்டத்துடன் காணப்படும். பகல் அதிகபட்ச வெப்பநிலை 30 முதல் 31 டிகிரி செல்சியசுக்குள் இருக்கும் நிலையில், இரவு குறைந்தபட்சம் 21 முதல் 22 டிகிரியாக குறையும்.

டிசம்பர் 14 மற்றும் 15 ஆம் தேதிகளிலும் இதே போன்ற வானிலை தொடரும். மேலும் காற்றின் ஈரப்பதம் அதிகரித்துள்ளதால், காலை மற்றும் இரவு நேரங்களில் சற்றே குளிர்ச்சியை உணரக்கூடிய சூழல் நிலவும். குறைந்தபட்சம் 20 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகும்.

இதேபோல் டிசம்பர் 16 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை, அதிகபட்சம் 31 டிகிரியும், குறைந்தபட்சம் 20 டிகிரியும் பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இந்த நாளிலும் குளிர் இருக்கும்.

16ம் தேதி வானில் மேகமூட்டம் மேலும் அதிகரிக்கக்கூடும். ஒரு சில இடங்களில் மட்டும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது

எனவே அடுத்து வரும் 5 நாட்களில் வாரத்தில் 14, 15, 16ம் தேதிகளில் கோவை இன்னும் கொஞ்சம் ஜில்லென்று இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

வரும் வாரங்களில் இன்னும் குளிர் அதிகரிக்கப்போகிறது.

Recent News

கிருஷ்ணா ஸ்வீட் இனிப்புகளில் வனஸ்பதி எண்ணெயா?- கோவையில் அதன் நிர்வாக இயக்குநர் அளித்த விளக்கம்…

கோவை; கிருஷ்ணா ஸ்வீட் இனிப்புகளில் வனஸ்பதி எண்ணெய் கலக்கப்படுவதாக வெளியான செய்திக்கு அதன் நிர்வாக இயக்குனர் மறுப்பு தெரிவித்துள்ளார். கிருஷ்ணா ஸ்வீட் நிறுவனத்தில் தயாரிக்கப்படும் இனிப்புகளில் நெய்க்கு பதிலாக வனஸ்பதி எண்ணெய் கலக்கப்படுவதாக செய்திகள்...

Video

எலுமிச்சை சுத்தி போட்டதில் ஏற்பட்ட தகராறு- கோவை அருகே பரபரப்பை ஏற்படுத்திய சிசிடிவி காட்சிகள்…

கோவை: எலுமிச்சை பழம் சுத்தி போட்டதில் தகராறு ஏற்பட்டு இரு வீட்டார் மோதிக்கொண்ட சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம் காரமடை அருகே புதிதாக வாங்கிய காருக்கு எலுமிச்சை பழம் சுற்றி திருஷ்டி...
Join WhatsApp