அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது.

Advertisement

கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம், கோவில்பாளையம் கௌசிகா நதிக்கரையோரம் அமைந்து உள்ள விவசாயத் தோட்டம் ஒன்றிற்குள், நேற்று நள்ளிரவில் சிறுத்தை ஒன்று உலாவி கொண்டிருந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி, அன்னூர் வட்டார மக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.

விவசாயி ஒருவரின் தோட்டத்து வாயிலில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்புக் கேமராவில் சிறுத்தை, சுற்றும் முற்றும் நோட்டமிட்டபடி இரை தேடி உலா வரும் காட்சிகள் பதிவாகி உள்ளன.

Advertisement

காலையில் தோட்டத்திற்குச் சென்று சி.சி.டி.வி பதிவுகளை ஆய்வு செய்த விவசாயி, இந்த நடமாட்டத்தைக் கண்டுள்ளார். ஊருக்கு மிக அருகில் உள்ள தோட்டத்தில் சிறுத்தை உலாவி வரும் நிலையில் ஊருக்குள் புகுவதற்குள் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Flipkart Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

Video

ஜிடி மேம்பாலத்தில் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்ட இளம் பெண்கள்…

கோவை: கோவை அவிநாசி சாலை ஜி.டி மேம்பாலத்தில் கார் சன்ரூஃபில் ஆபத்தான முறையில் அமர்ந்து சென்ற 4 இளம்பெண்களின் வீடியோ வைரலாகி வருகிறது. கோவை - அவிநாசி சாலையில் உள்ள ஜி.டி மேம்பாலத்தில், நள்ளிரவுக்குச்...