கோவை: வெள்ளலூர் அகழாய்வு பணிகளை பார்வையிட்டார் மாவட்ட ஆட்சியர்.
கோயம்புத்தூர் மாவட்டம், வெள்ளலூர் அகழாய்வு பணிகளையும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் செயல்பாடுகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் கிரியப்பனவர் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, மதுக்கரை வட்டாட்சியர் செந்தில்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முதலாவதாக, மாவட்ட ஆட்சித்தலைவர், வெள்ளலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் செயல்பாடுகளை நேரில் பார்வையிட்ட மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவமனையில் சிகிச்சை பிரிவுகளையும், மருந்து -மாத்திரைகளின் இருப்புகளையும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகளையும் ஆய்வு மேற்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் வெள்ளலூர் பகுதியில் தொல்லியல் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வு பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.




