கோவை அருகே U turn செய்த போது டிவைடரில் சிக்கிய கண்டெய்னர் லாரி

கோவை: கோவை அருகே U Turn செய்ய முயன்ற போது டிவைடரில் சிக்கிய லாரியால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கோவை- பொள்ளாச்சி சாலையில் சிட்கோ மேம்பாலத்திற்கு அடியில் கண்டெய்னர் லாரி திரும்ப முடியாமல் நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு ஜேசிபி இயந்திரம் மூலம் தடுப்புகள் அகற்றப்பட்டு போக்குவரத்து சீர் செய்யப்பட்டது.

கோவை- பொள்ளாச்சி சாலையில் ஏராளமான பள்ளி கல்லூரிகள், தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் அவ்வழியே செல்கின்றனர்.

இந்நிலையில் சிட்கோ அருகே உள்ள மேம்பாலத்தின் கீழ் கண்டெய்னர் லாரி ஒன்று U Turn எடுக்க முயன்ற பொழுது அந்த லாரி நீளமாக இருந்ததால் மேம்பாலத்தின் கீழ் இறங்கும் இடத்தில் இருந்து சிமெண்ட் டிவைடர் இடையே சிக்கி உள்ளது.

இதன் காரணமாக சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் அங்கு வந்த போக்குவரத்து காவல்துறையினர் ஜேசிபி இயந்திரத்தை கொண்டு அந்த சிமெண்ட் டிவைடர்களை அகற்றி லாரி செல்வதற்கு வழிவகை செய்தனர்.

அதன் பின்னர் போக்குவரத்து சீர் செய்யப்பட்டது. இதன் காரணமாக அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்களும் வேலைகளுக்கு செல்வோரும் பாதிக்கப்பட்டனர்.

Recent News

கோவையில் ரோட்டில் குப்பை வீசினால் நோட்டீஸ்- மாநகராட்சி நிர்வாகத்தின் எச்சரிக்கை…

கோவை: கோவை மாநகரில் குப்பைகளை ரோட்டில் வீசுவோருக்கு எச்சரிக்கை நோட்டீஸை மாநகராட்சி நிர்வாகம் அனுப்புகிறது. கோவை மாநகராட்சி பகுதியில் பொது இடங்களில் திறந்தவெளியில் குப்பை கொட்டுவதை தவிர்க்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. அவற்றை...

Video

தடாகம் அருகே அரிசியை ருசிபார்த்த யானை- அதிர்ச்சி காட்சிகள்…

கோவை: தடாகம் அருகே தோட்டத்து வீட்டில் வைத்திருந்த அரிசியை காட்டு யானை தின்று செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளான தடாகம், வரபாளையம், தாளியூர்,...
Join WhatsApp