கோவை மத்திய சிறையில் திருப்பூர் வாலிபர் திடீர் சாவு

கோவை: கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த திருப்பூர் வாலிபர் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் செங்குந்தபுரம் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் (33), கடந்த 2025ஆம் ஆண்டு திருப்பூரில் நடந்த வழக்கில் தண்டனை பெற்று கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

Advertisement

இந்நிலையில், சிறைச்சாலையின் 7வது பிளாக்கில் உள்ள அறையில் இருந்த அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மயங்கி விழுந்த கார்த்திகேயனை சிறை காவலர்கள் உடனடியாக சிறை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

பின்னர் அங்கு கொண்டு செல்லப்பட்ட கார்த்திகேயனை பரிசோதித்த மருத்துவர்கள், உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய தொடர்பான பிரச்சினையால் அவர் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

Advertisement

இதையடுத்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக கோவை ரேஸ்கோர்ஸ் போலீசில் சிறை வார்டன் திருமலை புகார் அளித்துள்ளார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சம்பவம் குறித்து உதவி கலெக்டர் விசாரணையும் நடைபெற்று வருகிறது.

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

கோவையில் சரக்கு வாகனம் மீது விழுந்த மரம்- ஒருவர் படுகாயம்…

கோவை: கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் விழுந்து விபத்து ஏற்பட்டதில் ஒருவர் படுகாயம் அடைந்தார். கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் சாலையோரம் இருந்த பிரம்மாண்ட மரம் ஒன்று திடீரென வேரோடு சாய்ந்து சரக்கு...

Video

கோவையில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து- பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம்…

கோவை: செட்டிபாளையம் அருகே பழைய பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. கோவை மாநகர போத்தனூர்- செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் குடேனில்...