கோவை: கோவையில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது கல்லை வீசிய நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்த காரின் மீது இருசக்கர வாகனத்தில் வந்த நபர் கல் வீசி தாக்கி சேதப்படுத்திய நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.
கோவை மாநகர் ஆவாரம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அருண்குமார் என்பவர் தனது வீட்டின் முன்பு வழக்கம் போல காரை நிறுத்தி இருந்தார்.
நேற்று இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்தவாறு வந்த நபர் ஒருவர், தான் வைத்திருந்த கல்லால் காரின் கண்ணாடி மீது வீசி சேதப்படுத்தி உள்ளார். இதில் கார் கண்ணாடி உடைந்தது.
இந்நிலையில் இந்த சம்பவத்தின் சிசிடிவி கட்சிகள் அருகில் இருந்த கேமராவில் பதிவாகி இருந்த நிலையில் தற்பொழுது அது வெளியாகி உள்ளது.


