உலக நன்மை வேண்டி கோடி முறைக்கும் மேல் விஷ்ணு ஸஹஸ்ரநாமம்- கோவையில் ஒன்று கூடிய பக்தர்கள்…

கோவை: கோவையில் உலக நன்மை வேண்டி விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணத்தை 2 கோடி முறைக்கும் மேல் ஒன்றாக பாடுகின்றனர்.

கோடி விஷ்ணு நாம பாராயணம் அமைப்பின் சார்பில் ஒவ்வொரு வருடமும் உலக நன்மை வேண்டி கோடி விஷ்ணு நாம பாராயணம் நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. இதில் அனைத்து மக்களும் கலந்து கொண்டு கோடி அல்லது கோடி முறைக்கும் மேல் விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணத்தை பாடுவர்.

அதன்படி 16வது ஆண்டாக இந்த ஆண்டும் இந்த நிகழ்வானது நடைபெறுகிறது. கோவை தடாகம் சாலை இடையார்பாளையம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெறும் இந்த நிகழ்வு மாலை வரை நடைபெறுகிறது.

இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்துள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள், பொதுமக்கள் ஒன்றாக இணைந்து தொடர்ச்சியாக விஷ்ணு ஸஹஸ்ரநாம பாராயணத்தை பாடி வருகின்றனர். இதில் நேரடியாக வந்து கலந்து கொள்ள முடியாதவர்கள் ஆன்லைன் (Video Call) வாயிலாகவும் கலந்து கொண்டுள்ளனர்.

Recent News

கோவையில் இராணுவ தளவாட உற்பத்தி கண்காட்சி இரு தினங்கள் நடைபெறுகிறது…

கோவை: ராணுவ தளவாட உற்பத்தி துறை சார்ந்த கான்கிளேவ் கோவை கொடிசியா வளாகத்தில் வரும் 13 ம்தேதி மற்றும் 14ம் தேதி ஆகிய இரு நாட்கள் நடைபெறுகின்றது. கோவை அண்ணா சிலை அருகே உள்ள...

Video

தடாகம் அருகே அரிசியை ருசிபார்த்த யானை- அதிர்ச்சி காட்சிகள்…

கோவை: தடாகம் அருகே தோட்டத்து வீட்டில் வைத்திருந்த அரிசியை காட்டு யானை தின்று செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளான தடாகம், வரபாளையம், தாளியூர்,...
Join WhatsApp