அச்சமா? இதைச் செய்யுங்கள்…! மாணவர்கள் மத்தியில் பிரியா செந்தில் பேச்சு… பெற்றோர்களே கவனியுங்கள்!

கோவை: பொதுத்தேர்வுகளை அச்சமின்றி எதிர்கொள்ளும் வகையில் கல்வியாளர் பிரியா செந்தில் தலைமையில் மாணவர்களுக்கான கருத்தரங்கம் கோவையில் நடைபெற்றது.

Advertisement

பள்ளி மாணவர்கள் எதிர்வரும் பொதுத்தேர்வுகளை அச்சமின்றி எதிர்கொள்ளும் விதமாக கோயம்புத்தூர் ரோட்டரி டிஸ்ட்ரிக்ட் 3206 சார்பில் சர்வஜன பள்ளி மாணவர்களுக்கான கருத்தரங்கம் இன்று நடைபெற்றது.

பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கல்வியாளர் பிரியா செந்தில் கலந்துகொண்டு 11 மற்றும் 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

Advertisement
priya senthil motivation speech

வாழ்வில் நீங்கள் எந்த நிலையை எதிர்கொண்டாலும் சரி, அது தேர்வாக இருக்கலாம், ஏதேனும் ஒரு போட்டியாக இருக்கலாம் அல்லது நீங்கள் சாதிக்க நினைக்கும் ஏதாவது ஒரு விஷயமாக இருக்கலாம், எதுவாக இருந்தாலும் விடாமுயற்சியும், தொடர் பயிற்சியும் வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ஒரு செயலை முடியாது என்று நினைக்கும் போதோ அல்லது, அதைப்பற்றியே யோசித்துக் கொண்டிருக்கும் போதோ நீங்கள் அதே இடத்தில்தான் நிற்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Advertisement

உதாரணமாக மாடிப்படி ஏறும் முன், இத்தனை படிகளை எப்படி ஏறி மேலே செல்வது என்று யோசித்துக் கொண்டிருந்தால் நீங்கள் நின்ற இடத்திலேயே தான் நிற்க வேண்டும். அதே நேரத்தில் நீங்கள் யோசித்துக் கொண்டிருக்கும் காலத்தில் உங்களுக்கு பய உணர்வும் அதிகரிக்கும்.

இந்த பய உணர்வைப் போக்க வேண்டுமென்றால் நீங்கள் செயலில் இறங்க வேண்டும். தேர்வுக்கு பயமாக இருக்கிறது என்று யோசித்துக் கொண்டிருக்காமல், நம்மால் முடியும் என்று நினைத்து தொடங்குங்கள்.

psg sarvajana school students

படிக்கும் போது திட்டமிட்டுக் கொள்ளுங்கள். இன்று நான் என்ன படிக்க வேண்டும்? எவ்வளவு படிக்க வேண்டும்? எந்த நேரத்திற்குள் அதனைப் படித்து முடிக்க வேண்டும் என்ற இலக்குகளை நிர்ணயித்து வைத்துக் கொள்ளுங்கள். அது உங்களுக்கு சரியான பலனைக் கொடுக்கும்

என்று பிரியா செந்தில் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில், சர்வஜனா பள்ளியின் செயலாளர் நாராயணசாமி, ரோட்டரி டிஸ்ட்ரிக்ட் 3206 அமைப்பின் தலைவர் ஹென்ரி அமல்ராஜ், RCC Royals தலைவர் மனோகரன், யூத் சேர் அபிஷேக், செயலாளர் வந்தியத் தேவன், சர்வஜனா பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Flipkart Link 2
Dev Mithran
Dev Mithran
Dev Mithran has 3 years of experience in the media field and is currently working as a content writer for News Clouds Coimbatore. He covers a wide range of beats including crime, politics, and lifestyle, bringing accurate, engaging, and audience-focused reporting to digital news.

Recent News

நம்ம கோவை தான் ‘தென்னிந்தியாவின் மான்செஸ்டர்’… சும்மாவா சொன்னாங்க!

தமிழகத்தில் 2வது பெரிய நகரமாக இருந்தாலும், சிறந்த தொழில் வளர்ச்சியடைந்த மாவட்டமாக கோவை திகழ்கிறது. எனவே, இந்த நகரை தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம், குறிச்சி பகுதியில் செயல்படும்...

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...