கோவை: உலகக்கோப்பை கால்பந்து இறுதிப் போட்டிகளை காண கோவையில் பல்வேறு இடங்களில் பெரிய திரைகள் ஏற்பாடு செய்யப்பட்டு ரசிகர்கள் அதனை கண்டு ரசித்தனர்.
FIFA உலகக்கோப்பை கால்பந்து இறுதிப் போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளது. இதன் இறுதி போட்டியில் அர்ஜெண்டினா, ஸ்பெயின் அணிகள் மோதின.
கால்பந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புடன் நடைபெற்ற இந்த இறுதி போட்டியை காண்பதற்கு பல்வேறு பகுதியில் சிறப்பு திரைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதன்படி கோவையிலும்
கோவை நவ இந்தியா சாலையில் உள்ள எஸ்என்ஆர் கல்லூரி ஆடிட்டோரியத்திலும் புலியகுளம் பகுதியிலுன் திரைகள் ஏற்பாடு செய்யப்பட்டு ஒளிபரப்பப்பட்டது.
ஆயிரக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள் திரண்டு் உற்சாகமாக கால்பந்து போட்டிகளை கண்டு ரசித்தனர். இந்திய நேரப்படி நள்ளிரவு 12:30 மணியளவில் இப்போட்டிகள் நடைபெற்றது.
நள்ளிரவு நேரம் என்றாலும் பல்வேறு பகுதிகளில் கால்பந்து ரசிகர்கள் ஒன்றிணைந்து இறுதி போட்டியை கண்டு ரசித்தனர் என்பதும் தற்போது கால்பந்து விளையாட்டு மீது ஆர்வம் அதிகரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.





