விபத்துகளைத் தவிர்க்க விழிப்புணர்வு; வடவள்ளியில் தலைக்கவசத்தின் அவசியம் குறித்து முகாம்

கோவை: வடவள்ளி போக்குவரத்து காவல்துறை சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு முகாமில், தலைக்கவசம் அணிவதன் அவசியம், சாலை விதிகளைப் பின்பற்றுதல் மற்றும் விபத்து நேரங்களில் உடனடி உதவி வழங்குவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Advertisement

கோவையில் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் அணிவதன் அவசியம் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து வடவள்ளி போக்குவரத்து காவல்துறை சார்பில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

கோவை மாநகர காவல் ஆணையர் கண்ணன் உத்தரவின் பேரிலும், போக்குவரத்து துணை ஆணையர் மகேஸ்வரன் மற்றும் உதவி ஆணையர் ராஜ்குமார் ஆகியோரின் வழிகாட்டுதலிலும், பி5 வடவள்ளி போக்குவரத்து காவல்துறை இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை வடவள்ளி ரவுண்டானா அருகே ஏற்பாடு செய்தது.

இந்த முகாமிற்கு வடவள்ளி போக்குவரத்து ஆய்வாளர் பெரியசாமி மற்றும் உதவி ஆய்வாளர் மகேந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினர். தலைக்கவசம் அணியாமல் வந்த இருசக்கர வாகன ஓட்டிகளை அமர வைத்து, தலைக்கவசம் உயிரைக் காக்கும் முக்கிய பாதுகாப்பு உபகரணம் என்பதையும், சாலை விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டியதன் அவசியத்தையும் காவல்துறையினர் விரிவாக எடுத்துரைத்தனர்.

Advertisement

மேலும், சாலை விபத்தில் சிக்குபவர்களுக்கு முதல்கட்ட உதவிகளை எவ்வாறு வழங்க வேண்டும் என்பது குறித்தும், அப்பகுதியில் உள்ள டாக்ஸி மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சிறப்பு விழிப்புணர்வு வழங்கப்பட்டது.

இந்த விழிப்புணர்வு முகாமில் தனியார் கல்லூரி மாணவர்கள், ‘உயிர்’ அமைப்பைச் சேர்ந்த தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் பங்கேற்று, சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் இணைந்தனர்.

Advertisement

Amazon Link 3
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

நீட் ரத்து கோரி கோவையில் தொடர் போராட்டம்; திமுக அலுவலகத்தில் குவிந்த இளைஞர்கள்

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், டெல்லி மாணவர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், கோவையில் முற்போக்கு இளைஞர் பேரவை சார்பில் திமுக அலுவலகத்தில் தொடர் போராட்டம் தொடங்கப்பட்டது.

Video

அன்னூரில் சிறுத்தை நடமாட்டம்- சிசிடிவி காட்சிகள்…

கோவை: அன்னூர் பகுதியில் தோட்டத்தில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டுள்ளது. கோவை அருகே நள்ளிரவில் ஊருக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றில் உலா வந்த சிறுத்தையின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கோவை மாவட்டம்,...