கோவையில் கொடூரம்! பச்சிளம் குழந்தையின் உடல் மீட்பு!

கோவை: கோவையில் பிறந்து சில மணி நேரங்களே ஆன குழந்தையின் உடல் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் நெஞ்சை ரணமாக்கியுள்ளது.

Advertisement

கோவை மாவட்டம் கோவில்பாளையம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட காளப்பட்டி- வீரியம்பாளையம் செல்லும் சாலையில் பிறந்து சில மணி நேரங்களே ஆன குழந்தையின் உடல் கை-கால்கள் சிதைந்த நிலையில் கிடந்துள்ளது.

இடுப்புக் கீழ் பாகங்களே இல்லாமல் இருந்த பச்சிளம் குழந்தையைப் பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும், இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் குழந்தையின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisement

இந்த கொடூர சம்பவம் குறித்து கோவில்பாளையம் போலீசார், கிராம நிர்வாக அலுவலர், குழந்தைகள் நல மைய அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் குழந்தையின் கால்கள் மற்றும் கைகள் அங்கு சுற்றித் திரியும் தெருநாய்களால் கடித்து குதறப்பட்டதாக தெரியவந்துள்ளது.

Advertisement

மேலும் குழந்தையின் பெற்றோர் குறித்து எந்த தகவலும் தெரியாத நிலையில், குழந்தையின் பெற்றோர் யார்? எவ்வாறு குழந்தை அங்கு வந்தது? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

பிறந்து சில மணி நேரங்களே ஆன பிஞ்சுக் குழந்தை உடல் சிதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் கோவையில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Amazon Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

நண்பர்கள் செய்த வெறிச்செயல்- கோவையில் கொடூரம்…

கோவை: கோவையில் தனியார் கல்லூரி மாணவனை சக மாணவர்கள் தாக்கியதில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் தனது மகனின் இந்த நிலைக்கு காரணம் கல்லூரி நிர்வாகம் தான் என்று பெற்றோர்கள்...

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.