கோவையில் அமைகிறது இந்தியாவின் முதல் பறவைகள் பாதுகாப்பு மையம்

கோவை: இந்தியாவின் முதல் இருவாச்சி பறவைகள் பாதுகாப்பு மையம் அமைக்கபட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

Advertisement

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இந்தியாவின் முதல் இருவாச்சி பறவைகள் பாதுகாப்பு சிறப்பு மையத்தை தமிழ்நாடு அமைக்க உள்ளது.

ஆசிய வெப்பமண்டலப் பகுதிகளில் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த கவர்ச்சிகரமான பறவைகளில் ஒன்றான இருவாச்சி பறவையினை பாதுகாப்பதற்கான முன்னோடி நடவடிக்கையாக, ஆனைமலை புலிகள் காப்பகத்தில் (ATR) இருவாச்சி பறவைகள் பாதுகாப்புக்கான சிறப்பு மையத்தை நிறுவுவதற்கு தமிழ்நாடு அரசு நிர்வாக அனுமதி வழங்கியுள்ளது.

Advertisement

இப்புதிய முன்னெடுப்பின் மூலம் இந்தியாவில் இருவாச்சி பறவைகள் பாதுகாப்பில் தமிழ்நாடு முன்னணியில் உள்ளது. மேலும், மேற்குத் தொடர்ச்சி மலைகளில் உள்ள வெப்பமண்டல வன சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பதில் ஒரு பெரிய முன்னேற்றமாகும்.

இருவாச்சி பறவைகள் வெப்பமண்டல காடுகளில் விதைகளைப் பரப்பி, மரங்களில் மீளுருவாக்கத்திற்கு ஒரு முக்கியமான பங்கை வகிக்கிறது. இருப்பினும், வாழ்விடச் சீரழிவு, காடழிப்பு மற்றும் காலநிலை மாற்றம் காரணமாக இந்த பறவை இனங்கள் அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றன. இப்பறவைகளின் பாதுகாப்பிற்கான அவசரத்தை உணர்ந்து, அறிவியல் ஆராய்ச்சி, வாழ்விட மறுசீரமைப்பு, சமூக ஈடுபாடு மற்றும் தேசிய மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு மூலம் இந்த சவால்களை எதிர்கொள்ள தமிழ் நாடு ஒரு பிரத்யேக மையத்தை நிறுவுகிறது.

Advertisement

இடம்: ஆனைமலை புலிகள் சரணாலயம் (ATR), கோயம்புத்தூர் மாவட்டம் – அதன் சுற்றுச்சூழல் வளம் மற்றும் தற்போதுள்ள பாதுகாப்பு உள்கட்டமைப்புக்காக தேர்ந்தெடுக்கப்பட்டது.

மேற்குத் தொடர்ச்சி மலைகளில் காணப்படும் நான்கு இனங்கள்: பெரிய இருவாச்சி, மலபார் சாம்பல் இருவாச்சி, மலபார் கருப்பு வெள்ளை இருவாச்சி மற்றும் இந்திய சாம்பல் இருவாச்சி.

அதிநவீன ஆராய்ச்சி, வாழ்விட மேப்பிங். கூடு பாதுகாப்பு, காலநிலை மாற்ற மதிப்பீடு, குடிமக்கள் அறிவியல் முயற்சிகள் மற்றும் வன ஊழியர்கள் மற்றும் உள்ளூர் சமூகங்களுக்கான திறன் மேம்பாடு.

சலிம் அலி பறவையியல் மற்றும் இயற்கை வரலாற்று மையம், இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை, இந்திய வனவிலங்கு நிறுவனம், உயர்நிலை வன உயிரினப் பாதுகாப்பு நிறுவனம், உள்ளூர் அரசு சாரா அமைப்பு மற்றும் இயற்கை கழகம்.

இந்த மையத்தை நிறுவுவதற்காக அழிந்து வரும் உயிரினப் பாதுகாப்பு நிதியத்தின் கீழ் மொத்தம் 1 கோடி ரூபாய் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதன் விவரம் பின்வருமாறு

  • ₹10 லட்சம் – விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரித்தல்.
  • ₹59.4 6 லட்சம் – ஆனைமலை புலிகள் காப்பகத்தில் மையம் அமைத்தல்.
  • ₹12.6 லட்சம் – வாழ்விட மதிப்பீடு
  • ₹6 லட்சம் – இருவாச்சி பறவைகள் வாழ்விடத்தைப் பாதுகாக்கும் தனியார் உரிமையாளர்களுக்கு ஊக்கத்தொகை.
  • ₹12 லட்சம் – வாழ்விட மேப்பிங், இனங்கள் மேப்பிங், பங்குதாரர் விழிப்புணர்வு மற்றும் பணியாளர்கள் பயிற்சி மற்றும் ஊழியர்களிடையே திறன் மேம்பாடு.

குறிக்கோள்கள் மற்றும் எதிர்பார்க்கப்படும் விளைவுகள்

இம்மையம் கீழ்க்கண்டவற்றில் தனது கவனத்தைச் செலுத்தும்:

அறிவு இடைவெளிகளை நிரப்புதல்: இருவாச்சி பறவைகளின் பரவல், இனப்பெருக்கம் குறித்த தரவு சார்ந்த நுண்ணறிவுகள் மற்றும் நடத்தை.

பாதுகாப்பு ஆராய்ச்சி: நீண்டகால கண்காணிப்பு, தொலைநோக்கி மற்றும் சூழலியல் ஆய்வுகள்.

வாழ்விட மறுசீரமைப்பு: சீரழிந்த பகுதிகளில் அத்திமரம், சாதிக்காய் மற்றும் கருங்குங்கிலியம் போன்ற பூர்வீக இருவாச்சியின் உணவு மரங்களை நடுதல்.

சமூக ஈடுபாடு. உள்ளூர் மாணவர்களுக்கான உதவித்தொகைகள், கூடு தத்தெடுப்பு திட்டங்கள் மற்றும் விதை சேகரிப்பு மூலம் நிலையான வாழ்வாதார வாய்ப்புகள்.

விழிப்புணர்வு மற்றும் கல்வி: இயற்கை தகவல் மையம்.
மாணவர்களுக்கான கள அடிப்படையிலான திட்டங்கள். நாட்டுப்புற ஆவணங்கள் மற்றும் வருடாந்திர இருவாச்சி பறவைகள் பாதுகாப்பு மாநாடுகள்.

இந்த முயற்சி தமிழ்நாட்டின் துணிச்சலான பாதுகாப்பு பயணத்தில் மற்றொரு மைல்கல் ஆகும். இந்தியாவின் முதல் கடற்பசு பாதுகாப்பு சரணாலயம், நீலகிரி வரையாடு திட்டம், தேவாங்கு பாதுகாப்பு மையம் மற்றும் மதுக்கரையில் செயற்கை நுண்ணறிவு மூலம் யானைகள் பாதுகாப்பு திட்டம் ஆகியவற்றை நிறுவியதைத் தொடர்ந்து இருவாச்சி பறவைகளின் பாதுகாப்பபிற்கான சிறப்பு மையம் உருவாக்கப்பட்டதன் மூலம், இருவாச்சி பறவைகள் பாதுகாப்பை நிறுவனமயமாக்கிய முதல் மாநிலமாக தமிழ்நாடு மாறியுள்ளது.

அழிந்து வரும் பல உயிரினங்களைப் பாதுகாக்கும் பாரம்பரியத்தைக் கொண்ட ஆனைமலை புலிகள் காப்பகம், இப்போது இருவாச்சி சூழலியல் மற்றும் பாதுகாப்புத் தலைமைத்துவத்திற்கான மையமாகச் செயல்படும்.

இந்த மையம் பல்லுயிர் பாதுகாப்பிற்கான எதிர்கால தலைமுறை பாதுகாவலர்களை ஊக்குவிக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தமிழக அரசு அறிவித்துள்ளது.

Flipkart Link 1
Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

Video

கோவையில் செய்த தவறை உணர்ந்த இளம்பெண்- வீடியோ காட்சிகள்…

கோவை காந்திபுரம் செல்போன் கடையில் வாடிக்கையாளர் போல் நடித்து ஐபோன் 13-ஐ திருடிச் சென்ற இளம்பெண், சிசிடிவி காட்சிகள் வைரலானதைத் தொடர்ந்து தனது தவறை ஒப்புக்கொண்டு செல்போனை மீண்டும் கடையில் ஒப்படைத்தார்.