காஞ்சி மகாபெரியவர் ஜெயந்தி: கோவையில் சிறப்பு ஹோமம்!

கோவை: காஞ்சி மகாபெரியவரின் 131 ஆவது ஜெயந்தி தினத்தை முன்னிட்டு பேரூர் மகா பெரியவர் மணிமண்டபத்தில், ஹோமம், பாராயணம், அன்னதான நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

காஞ்சி காமகோடி பீடத்தின் 68வது சங்கராச்சாரியார் ஜகத்குரு பூஜ்ய ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி மஹாஸ்வாமிகளின் ஜெயந்தி தினம், பேரூர் காஞ்சி பெரியவர் மணி மண்டபத்திலுள்ள ஸாம வேத பாராயண டிரஸ்ட் சார்பாக கடந்த மூன்று நாட்கள் கொண்டாடப்பட்டது.

Advertisement

இவ்விழாவில் வேத வேதபாராயணம் செய்யப்பட்டது. மேலும், சங்கீர்த்தனம், அன்னதானம் உள்பட பல சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

சிறப்பு அலங்காரத்தில் மகா பெரியவர் அருள் பாலித்தார். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

Advertisement

Sathiya Priya
Sathiya Priyahttp://newscloudscoimbatore.com
Sathiya priya is an experienced journalist with 8 years of experience across various media platforms, and for the past 5 years she has been working with NewscloudsCoimbatore (NCC). She specializes in civic affairs, social issues, and people-centric reporting with a strong focus on accuracy and credibility.

Recent News

Video

கோவையில் பிளாஸ்டிக் குடோனில் தீ விபத்து- பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம்…

கோவை: செட்டிபாளையம் அருகே பழைய பிளாஸ்டிக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. கோவை மாநகர போத்தனூர்- செட்டிபாளையம் சாலையில் உள்ள பழைய பிளாஸ்டிக் குடேனில்...