மருதமலையில் கந்தர் சஷ்டி தொடக்கம்- கங்கணம் கட்டி விரதத்தை துவங்கிய பக்தர்கள்…

கோவை: மருதமலையில் கந்தர் சஷ்டி விழாவை முன்னிட்டு பக்தர்கள் கங்கணம் கட்டி விரதத்தை துவங்கினர்.

மருதமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் கந்தர் சஷ்டி விழா இன்று தொடங்கியதை முன்னிட்டு பக்தர்கள் கங்கணம் கட்டி விரதத்தை துவக்கினர்.

கோவை மருதமலை சுப்பிரமணியசாமி கோவில் முருகனின் ஏழாவது படை வீடாக கருதப்படுகிறது. தீபாவளி பண்டிகை முடிந்ததை அடுத்து இன்று முதல் கந்தர் சஷ்டி விழா விநாயகர் பூஜையுடன் தொடங்கியது.

Advertisement

இந்த சஷ்டி விழாவில் விரதம் மேற்கொள்ளும் பக்தர்கள் சிவாச்சாரியார்களிடம் காப்பு கட்டி விரதத்தை துவக்கினர். இந்த நிகழ்வில், யாகசாலைகள் அமைத்து பூஜை தொடங்கியது.

28ம் தேதி வரை கந்தர் சஷ்டி விழா கொண்டாடபட உள்ள நிலையில் இனி ஒவ்வொரு நாளும் சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

குறிப்பாக 27, 28 ஆகிய இரண்டு தினங்களுக்கும் பக்தர்கள் மலை கோவிலுக்கு வாகனங்களில் செல்வதற்கு அனுமதி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

இதே போன்று கோவையில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும் கந்தர் சஷ்டி விழா துவங்கி உள்ளது.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

ஜெ., ஆத்மா இபிஎஸ்க்கு தண்டனை கொடுத்துள்ளது: கோவையில் செங்கோட்டையன் பேட்டி!

ஜெயலலிதா ஆத்மாதான் எடப்பாடி பழனிசாமிக்கு தண்டனை கொடுத்துள்ளது என்று கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Video

கோவையில் சிக்கன் கடையில் வாலிபர் கைவரிசை- சிசிடிவி காட்சிகள் வெளியீடு…

கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.3,500-ஐ வாலிபர் ஒருவர் திருடிச் சென்ற சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது.