கோவை: கோவையில் கனமழை பெய்ததன் காரணமாக பல்வேறு இடங்களில் மழையில் தேங்கியதால் பொதுமக்கள் சிரமம் அடைந்தனர்.
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்ற வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது அதன்படி கோவையில் நேற்று காலையில் முதல் வெயில் வாட்டி வந்த நிலையில் மாலையில் பல்வேறு பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது அதனை தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது
.
கோவை மாநகரில் உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்ததன் காரணமாக பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது. இதன் காரணமாக வேலை முடிந்து வீடுகளுக்கு செல்லும் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் ஆகியோர் சிரமம் அடைந்தனர்.
அதேபோன்று கோவை புறநகர் பகுதிகளான தடகம் சாலை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் அரை மணி நேரத்திற்கு மேலாக மிதமான மழை பெய்தது. உக்கடம் பகுதியில் பேருந்து நிறுத்தத்திற்கு முன்பு குளம் போன்று மழை நீர் தேங்கி நின்றதால் மக்கள் அவதியடைந்தனர்.

