கோவையில் இரவு பெய்த கனமழை- மக்கள் அவதி…

கோவை: கோவையில் கனமழை பெய்ததன் காரணமாக பல்வேறு இடங்களில் மழையில் தேங்கியதால் பொதுமக்கள் சிரமம் அடைந்தனர்.

மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்ற வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது அதன்படி கோவையில் நேற்று காலையில் முதல் வெயில் வாட்டி வந்த நிலையில் மாலையில் பல்வேறு பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது அதனை தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது
.

கோவை மாநகரில் உக்கடம், ரயில் நிலையம், காந்தி பார்க், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்ததன் காரணமாக பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது. இதன் காரணமாக வேலை முடிந்து வீடுகளுக்கு செல்லும் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் ஆகியோர் சிரமம் அடைந்தனர்.

அதேபோன்று கோவை புறநகர் பகுதிகளான தடகம் சாலை இடையர்பாளையம் டிவிஎஸ் நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் அரை மணி நேரத்திற்கு மேலாக மிதமான மழை பெய்தது. உக்கடம் பகுதியில் பேருந்து நிறுத்தத்திற்கு முன்பு குளம் போன்று மழை நீர் தேங்கி நின்றதால் மக்கள் அவதியடைந்தனர்.

Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Recent News

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி; பருத்தி இறக்குமதி வரியை ரத்து செய்ய கோவை ஜவுளித்துறையினர் கோரிக்கை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக மூலப்பொருட்கள் விலையேற்றம் கண்டுள்ள நிலையில், பருத்தி இறக்குமதி வரியை ரத்து செய்ய கோவை ஜவுளித்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Video

கோவையில் சிக்கன் கடையில் வாலிபர் கைவரிசை- சிசிடிவி காட்சிகள் வெளியீடு…

கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.3,500-ஐ வாலிபர் ஒருவர் திருடிச் சென்ற சிசிடிவி காட்சிகள் வைரலாகி வருகிறது.