பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினருக்கு கடன் உதவி- கோவை ஆட்சியர்…

கோவை: பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினருக்கு கடன் உதவி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Advertisement

டாப்செட்கோ எனப்படும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின் மூலம் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் வகுப்பை சார்ந்தவர்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் ஆட்டுப்பண்ணை, ஹோட்டல், ஜவுளிக்கடை போன்ற தொழில்களுக்கு தனிநபர் கடன், சுயஉதவிக் குழுக்களுக்கான சிறுதொழில் கடன் மற்றும் வெளிநாட்டு பல்கலைக் கழகங்களில் உயர்கல்வியை மேற்கொள்வதற்காக கல்விக் கடன் ஆகிய கடன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்ட வருகின்றது.

டாப்செட்கோ கடன் திட்டத்திற்கான லோன் மேளா வருகின்ற 07.09.2026 அன்று கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டரங்கில் காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது.

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் சாதி சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், ஆதார் அடையாள அட்டை, நகல் புகைப்படம் மற்றும் திட்ட தொழில் அறிக்கை ஆகிய ஆவணங்கள் கட்டாயம் உடன் கொண்டு வர வேண்டும்.

Advertisement

எனவே, இம்மாவட்டத்தில் வசிக்கும் பிற்படுத்தப்பட்டோர். மிக பிற்படுத்தப்பட்டோர்சீர் மரபினர் வகுப்பைச் சார்ந்த தனிநபர்கள், குழுக்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் லோன் மேளாவில் கலந்துக்கொண்டு பயன் பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் கிரியப்பனவர் தெரிவித்துள்ளார்.

Amazon Link 2
Prakash N
Prakash Nhttps://www.newscloudscoimbatore.com
Prakash is a journalist with 4 years of experience in the media field. Passionate about journalism, he has been working with Newsclouds Coimbatore for the past 2 years, focusing on Coimbatore-centric news. His reporting emphasizes ground-level stories, accuracy, and issues that directly impact the local community.

Recent News

மலைவாழ் மக்களின் பொருட்களுக்கு சந்தை வாய்ப்பு! கோவையில் சிறப்பு கண்காட்சி!

கோவை அவினாசி சாலையில் உள்ள சுகுணா திருமண மண்டபத்தில் செப்டம்பர் 12 மற்றும் 13 தேதிகளில் 162 ஸ்டால்களுடன் சிறப்பு கண்காட்சி நடைபெற உள்ளது. இதில் மலைவாழ் மக்கள் மற்றும் பெண்கள் தயாரிக்கும் இயற்கைப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் உள்ளிட்டவை இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட உள்ளன.

Video

தொழிலாளர்கள் கொட்டகையை சேதப்படுத்திய காட்டுயானை- கோவை அருகே பரபரப்பு…

கோவை: கட்டிட தொழிலாளர்கள் தங்கியிருந்த தகர கொட்டகையை சேதப்படுத்திய ஒற்றை காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது. கோவை துடியலூர் அடுத்துள்ள கதிர் நாயக்கன்பாளையம் பகுதியில் நேற்று நள்ளிரவில் குடியிருப்புக்குள் புகுந்து வடமாநில தொழிலாளர்கள் தங்கியிருந்த...